வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு உதவ முன்வருமாறு மட்டக்களப்பு சமாதான நீதிவான்களின் மனித உரிமைகள் அமைப்பின் தலைவர் ஏ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
துறை நீலாவணை தொடக்கம் வெருகல் வரை வாகன பவனி மூலம் வன்னி மக்களுக்காக பொருட்களை சேகரிக்கும் பணியினை எதிர்வரும் 16 ஆம், 17 ஆம், 18 ஆம் திகதிகளில் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.