வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கென நிந்தவூர் பிரதேச செயலகமும், ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையும் இணைந்து இளைஞர்களின் உதவியோடு நிந்தவூர் பிரதேசத்தில் வீடு வீடாகச் சென்று மனிதாபிமான முறையில் சேகரிக்கப்பட்ட சுமார் பத்து இலட்சம் ரூபா பெறுமதியான பலதரப்பட்ட உலருணவுப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக நிந்தவூர் பிரதேச செயலாளர் ஐ. எம். ஹனிபா தெரிவித்தார்.