::தேர்தல்கள்

::தேர்தல்கள்

இலங்கைத் தேர்தல்கள் பற்றிய செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள்.

மேல் மாகாணசபைக்கான தேர்தல் இன்றாகும். தேர்தலில் 60% வாக்குப்பதிவு – முஹம்மட் அமீன்.

election.jpgஇன்று சனிக்கிழமை மேல்மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறுகின்றது. காலை 7.00மணிக்கு ஆரம்பமான வாக்கெடுப்பு மாலை 4.00மணிவரை நடைபெறும். கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களிலுள்ள 2769 வாக்குச் சாவடிகளிலும் இவ்வாக்கெடுப்பு நடைபெறுகின்றன.

மேல் மாகாண சபைக்கு 102 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இத்தேர்தலில் 2378 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

கொழும்பு,கம்பஹா, களுத்துறை மாவட்டங்களிலுள்ள 38 இலட்சத்து 20 ஆயிரத்து 214 பேர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்கும் இன்றைய தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக 17,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், 12,000 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.

319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ணப் படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள மாகாணசபைகளுள் மக்கள் தொகை கூடிய மாகாணசபையும், பிரதிநிதிகள் எண்ணிக்கை அதிகரித்த மாகாணசபையும் மேல்மாகாண சபையாகும்.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால்,  இன்று தேர்தல் நடைபெறும் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

நேர்மையானதும் சுதந்திரமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுடன், வாக்குச் சாவடிகளுக்கு வாக்காளர்கள் காலையிலேயே சென்று வாக்களிக்குமாறும் தேர்தல் ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்தேர்தலின் போது குறிப்பாக வாக்குச் சாவடியினுள் புகைப்படம் பிடிப்பதற்கோ செய்திகள் சேகரிப்பதற்கோ எந்தவொரு ஊடகத்திற்கும் அனுமதி இல்லை எனவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.

இரு தடவைகள் அல்லது பல தடவைகள் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டவர்கள் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் மட்டுமே வாக்களிக்க வேண்டும்.

இன்று இரவு எட்டு மணிக்குப் பின்னர் தபால் வாக்குகளின் முடிவுகள் அறிவிக்கப்படுவதுடன், நள்ளிரவுக்குப் பின்னர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார். வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லும் வாக்காளர்கள் தம்மை உறுதிப்படுத்தக் கூடிய தேர்தல் ஆணையாளரினால் ஏற்றுக் கொள்ளப்படும் எனக் குறிப்பிடப்பட்ட அடையாள அட்டையை உடன் எடுத்துச் செல்லுமாறும் தேர்தல் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் விளைவிக்க வேண்டாம் எனவும், குழப்பம் விளைவிக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்தில் பதிவான வாக்குகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்றும் ஆணையாளர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடந்து முடிந்த வடமேல் மாகாண தேர்தலின் போது புத்தளம் மாவட்டத்தின் நாயக்கர் சேனை வாக்குச் சாவடியின் வாக்குகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு மறுவாக்குப் பதிவு நடத்தப்பட்டமையையும் நினைவு கூர்ந்தார்.

மேல்மாகாண தேர்தல் தொடர்பான செய்திகள் தேசம்நெற் வாசகர்களுக்காக உடனுக்குடன் திரட்டித் தருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தலின் புதிய நிலவரங்கள் குறித்த செய்திகள் தொடர்ந்தும் இதே தலைப்பின் கீழ் இணைக்கப்பட்டு வரும்.

இணைப்பு -01

தேர்தல் ஆரம்பமாகி நான்கு மணி நேரம் முடிவடையும் நிலையில் கொழும்பு கம்பஹா தேர்தல் மாவட்டங்களில் சுமுகமாக வாக்களிப்பு நடைபெறுவதாக தேசம் நெட்டுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுவரை கொழும்பு மாவட்டத்தில் 18 வீதமானோரும், கம்பஹா மாவட்டத்தில் 25 வீதமானோரும் வாக்களித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னைய தேர்தலுடன் ஒப்பு நோக்கும் போது வாக்களிப்பு மந்தமாக இடம்பெறுவதையே அவதானிக்க முடிந்தது.

களுத்துறை மாவட்டத்தில் சில வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. இதனால் ஒரு வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிப்பு இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. களுத்துறை மாவட்டத்தில் சராசரி வாக்களிப்பு வீதம் 20க்கும் குறைவு என களுத்துறையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணைப்பு -02

மேல்மாகாண சபைத் தேர்தலில் 55 தொடக்கம் 60 சத வீதம் வரையான வாக்குப் பதிவு

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (25) சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி அது முடிவடைந்த நேரமான மாலை 4.00 மணிவரையான காலப் பகுதிக்குள் பாரதூரமான சம்பவங்கள் எதுவும் இடம் பெறவில்லையென தேர்தல்கள் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்தன.

இன்று நடைபெற்ற மேல்மாகாண சபைத் தேர்தல் வாக்களிப்பு 55 தொடக்கம் 60 வீதமாகக் காணப்பட்டதாகவும் தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்தது.

இதேவேளை, தபால் மூல வாக்குகள் எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபால் மூல முடிவுகளை இன்று நள்ளிரவுக்குப் பின்னர் அறிவிக்கக் கூடியதாகவிருப்பதுடன். ஏனைய முடிவுகளை நாளை (26) அதிகாலையில் 3.00 மணியிலிருந்து வெளியிட முடியுமெனவும் தேர்தல்கள்; திணைக்களம் நம்பிக்கை தெரிவித்தது.

பெப்ரல் அமைப்பு கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு மாவட்டத்தில் 53 சதவீதமான வாக்குகளும் களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் 60 சத வீதமான வாக்குகளும் அளிக்கப்பட்டதாகத் தெரிவித்தது.

நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான கண்காணிப்பு அமைப்பு (கபே) இன்றைய தேர்தல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், 49 சிறு,சிறு சம்பவங்கள் இடம்பெறிருந்தாலும் அமைதியானதாகவும் உற்சாகமானதாகவும் வாக்களிப்பு இடம்பெற்றதாகத் தெரிவித்துள்ளது.

இணைப்பு -03

மேல் மாகாண சபை தேர்தலில் 60% வாக்குப்பதிவு

sri-lanka-election.jpgமேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

மேல் மாகாண சபைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு  அமைதியான முறையில் நடந்து முடிந்துள்ளது. மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களிப்பில் கலந்துகொண்டதைக் காணமுடிந்தது. காலை வேளையில் வாக்களிப்பு மந்தமாக இருந்தபோதிலும், நண்பகலுக்கு பின்னர் சுறுசுறுப்படைந்திருந்ததாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுத்துறை, கொழும்பு, கம்பஹா ஆகிய மூன்று மாவட்டங்களிலுமாக 60% வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாக பிரதி தேர்தல்கள் ஆணையாளர் டபிள்யு.பி. சுமணசிறி தெரிவித்தார்.

களுத்துறை மாவட்டத்தில் 65% வாக்குப் பதிவும், கம்பஹா மாவட்டத்தில் 60% வாக்குப் பதிவும் கொழும்பு மாவட்டத்தில் 53% வாக்குப் பதிவும் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை இடம் பெற்ற வாக்குப் பதிவு சுமுகமாக நிறைவடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.

தேர்தல் நடைபெற்ற மூன்று மாவட்டங்களிலும் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன், இராணுவத்தினரும் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர்.

தெரிவு செய்யப்படவுள்ள 102 உறுப்பினர்களில் 43 பேர் கொழும்பு மாவட்டத்திலும், 39 பேர் கம்பஹா மாவட்டத்திலும் 20 உறுப்பினர்கள் களுத்துறையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப் பெட்டிகள், எண்ணும் நிலையங்களுக்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டன. தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 11 மணிக்குப் பின்னர் அறிவிக்க தேர்தல்கள் தலைமையகம் ஏற்பாடு செய்திருந்தது. இறுதி முடிவுகள் காலை வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொழும்பு மாவட்டத்திலுள்ள கொழும்பு வடக்கு, மத்தி, கிழக்கு, மேற்கு, தெஹிவளை, இரத்மலானை, பொரளை, கொலன்னாவ, கோட்டே, மஹரகம, ஹோமாகம, மொறட்டுவை, கடுவெல, அவிசாவளை, கெஸ்பாவ ஆகிய 15 தொகுதிகளில் 43 பேரைத் தெரிவு செய்யவென 15, 60,593 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

கம்பஹா மாவட்டத்தில் வத்தளை, களனி, மகர, நீர்கொழும்பு, கட்டான, திவுலப்பிட்டிய, மீரிகம, மினுவாங் கொடை, அத்தனகல, கம்பஹா, ஜா-எல, பியகம, தொம்பே ஆகிய 13 தொகுதிகளில் 39 உறுப்பினர்களைத் தெரிவு செய்யவென 14, 58, 295 பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றிருந்தனர்.

களுத்துறை மாவட்டத்தில் பாணந்துறை, பண்டாரகம, ஹொரணை, புளத்சிங்கள, மத்துகம, களுத்துறை, பேருவளை, அகலவத்தை ஆகிய எட்டுத் தொகுதிகளில் 20 பேரைத் தெரிவு செய்ய 8,1, 326 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர்.

நாளை மேல்மாகாணசபைத் தேர்தல்

sri-lanka-election.jpgநாளை சனிக்கிழமை மேல் மாகாணசபைக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. மேல்மாகாணத்தில் கொழும்பு மாவட்டத்தில் 17 கட்சிகளும், 13 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. கம்பஹா மாவட்டத்தில் 11 கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுவதோடு களுத்துறை மாவட்டத்தில் 10 கட்சிகளும், 6 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.

நாளை காலை 7.00மணி முதல் 4.00மணிவரை வாக்களிப்பு நடைபெறும். வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் தேசம்நெற் க்குத் தெரிவித்தது. 319 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்குகள் எண்ண ப்படவுள்ளதோடு தபால் மூல வாக்குகள் எண்ணுவதற்கு 19 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாணசபையின் கொழும்பு மாவட்டம் பொதுவாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்புடைய மாவட்டமாகவே இருந்துவருகின்றது. இந்தத் தேர்தலில் இலங்கையில் தற்போது நடைபெறும் யுத்தம் தென்பகுதி மக்களின் மனோநிலை எப்படிப்பட்டதென்பதை வெளிப்படுத்துவதாக அமையலாமென கருதப்படுகின்றது. தேர்தல் பிரசார காலங்களில் சில அடாவடித்தனங்களும் தேர்தல் விதிமுறை மீறல்கள் நடைபெற்றன. ஆனால், நாளையதினம் தேர்தல் நேரத்தில் தேர்தல் வன்முறைகள் இடம்பெறாதுவிடின் மக்களின் மனோநிலையை அளவிடக்கூடிய ஒரு அளவுகோலாக இத்தேர்தல் அமையலாமென தேர்தல் அவதானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வடமாகாணத்தில் இடம்பெற்றுவரும் யுத்த நிலையின் தென்பகுதி மக்களின் கருத்துக் கணிப்பாகவும் இத்தேர்தலைக் கொள்ள முடியுமென இவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் முறையைப் பொறுத்தே இக்கருத்துக் கணிப்பை அளவிடலாம் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேல்மாகாண தேர்தல் கடமைகளில் 43 ஆயிரம் அரச ஊழியர்கள் – தேர்தல்கள் செயலகம் தகவல்

மேல்மாகான சபைத் தேர்தல் கடமைகளுக்காக 43 ஆயிரம் அரசாங்க உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் 12, 180 அரச ஊழியர்கள் தேர்தல் மத்திய நிலையங்களில் கடமையாற்றவுள்ளனர். இதுதவிர வாக்கு எண்ணும் நிலையங்களில் 8,000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கம்பஹா மாவட்ட தேர்தல் கடமைகளுக்காக 12, 000 ஊழியர்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதோடு வாக்கு எண்ணும் பணிகளுக்காக 1,500 பேர் பணியாற்றவுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக சுமார் 10,000 ஊழியர்கள் சேவையாற்றவுள்ளனர். இதேவேளை, தேர்தல் நடவடிக்கைகளுக்காக 2,500 வாகனங்கள்  சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஹெல உறுமய இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்த முயல்வதுடன் வாக்கும் கேட்கின்றனர்

sri-lanka-election.jpgஹெல உறுமய போன்ற கட்சிகள் இனங்களுக்கு இடையில் மோதல்களை ஏற்படுத்த முயலுகின்றன. மதங்களுக்கு இடையில் பிரச்சினைகளை உருவாக்குகின்றன. இவர்களுக்கு நாம் வாக்களிக்கலாமா? என்று கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான யோசப் மைக்கல் பெரேரா நீர்கொழும்பில் நடைபெற்ற ஐ.தே.க.பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது கேள்வி எழுப்பினார்.

மேல் மாகாண சபைத் தேர்தல் நாட்டில் ஒரு முக்கிய தேர்தல் மக்களின் ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சிக்கே அதிகரித்துவருகிறது என்றார்.

சப்ரகமுவ மாகாண எதிர்க்கட்சி தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தமது உரையில் (உண்மையான சம்பவங்களை ஊடகங்கள் தெரிவிப்பதில்லை. ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. பல ஊடக வியலாளர்கள் நாட்டைவிட்டு தப்பியோடியுள்ளனர்.

மேல் மாகாண சபைத்தேர்தலில் நீர்கொழும்பு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற இக் கூட்டத்தில் தொடர்ந்து பேசிய அவர்: மாகாண சபையின் மூலம் நீர்கொழும்பில் ஆளும் கட்சியினர் என்ன செய்தனர் 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் நீர்கொழும்பில் எத்தனைபேர் சித்திபெற்றனர். ஐ.தே.க.ஆட்சியின் போது தனியார் கத்தோலிக்க பாடசாலை இங்கு ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அரசு அடிப்படைவாதத்துடன் செயற்படுகிறது.

மேல்மாகாண சபைத்தேர்தலில் மக்கள் ஆட்சியாளர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். ஊழல் மோசடியற்ற ஒரு அரசை விரைவில் ஐக்கிய தேசியக் கட்சி அமைக்கும் நீர்கொழும்பு தொகுதியில் இருந்து முவரும் வெற்றிபெறுவார்கள் என்றார்.

மனோவுக்கு அல்லது விக்ரமபாகுவுக்கே மேல் மாகாணத் தேர்தலில் வாக்களியுங்கள்- கூட்டமைப்பு கோரிக்கை

election.jpgஜனநாயக மக்கள் முன்னணி அல்லது இடதுசாரி ஐக்கிய முன்னணி சார்பான வேட்பாளர்களே மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் மக்களின் தெரிவாக இருக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி.யான என். ஸ்ரீகாந்தா வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

மேல்மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கருத்து வெளிட்டிருக்கும் ஸ்ரீகாந்தா மேலும் தெரிவித்திருப்பதாவது; எதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் தமிழ் வாக்காளர்கள் அனைவரும் தத்தமது வாக்குரிமையை தவறாது பயன்படுத்த வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிக்கும் தமிழ் மக்களின் முன்பாக இருக்கும் தெரிவு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதே.

எனவே, ஒன்றில் மனோ கணேசன் எம்.பி.யினால் (ஜனநாயக மக்கள் முன்னணி) நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்தும் குரல் கொடுத்து வரும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்னவின் தலைமையிலான இடதுசாரி ஐக்கிய முன்னணிக்கே வாக்களிக்க வேண்டும்.

இந்த 2 அணிகளில் எதனை தெரிவு செய்வதென்பது அவரவரைப் பொறுத்தது. இந்த 2 அணிகளுமே தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளோடு இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றன.

இரண்டாம் கட்ட தேர்தல்: 60 சதவீத ஓட்டுபதிவு

india-election.jpg மக்களவை இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத ஓட்டு பதிவாகியுள்ளது. லோக்சபா தேர்தல் ஐந்து கட்டங்களாக நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் 140 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் சராசரியாக 60 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

140 தொகுதிகளில் 2வது கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது

india-election.jpg140 லோக் சபா தொகுதிகளுக்கு 2வது கட்ட வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது.

மொத்தம் 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காலை தொடங்கிய வாக்குப் பதிவு மிதமான முறையில் நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடியும். இருப்பினும் நக்சலைட் பாதித்த பீகார், ஜார்க்கண்ட் மாநில தொகுதிகளில் 3 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விடும்.

இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், அவற்றின் தொகுதிகளும்..ஆந்திரா 20, அஸ்ஸாம் 11, பீகார் 13, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 1, கர்நாடகா 17, மத்தியப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 25, ஒரிசா 11, திரிபுரா 2, உ.பி. 17, ஜார்க்கண்ட் 9. இவை தவிர ஆந்திர மாநில சட்டசபையின் 140 சீட்கள் மற்றும் ஒரிசாவின் 77 சீட்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு இன்றுடன் தேர்தல் முடிந்து விடும்.

மொத்தம் 121 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ராகுல் காந்தி, சரத் பவார், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இன்றைய தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.

மேல் மாகாணசபை தேர்தலில் இடதுசாரி முன்னணிக்கு வாக்களியுங்கள்: எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

sivajilingam0.jpgகொழும்பு உட்பட மேல் மாகாண சபைத் தேர்தலில் மேசைச் சின்னத்தில் போட்டியிடும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தலைமையிலான இடதுசாரி முன்னணிக்கு (லங்கா சம சமாஜக் கட்சி) வாக்களிப்பதன் மூலம் தமிழ் மக்களிற்கான குரலை கொழும்பில் ஓங்கி ஒலிக்கச்செய்ய முடியும் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரபாகரன் பயங்கரவாதி அல்ல எனது நல்ல நண்பர்- கருணாநிதி : பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

karunanidhi-prabhakaran.jpgவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் எனது நல்ல நண்பர். அவர் பயங்கரவாதி அல்ல. ஒரு வேளை அவர் கொல்லப்பட்டால் நான் மிகவும் வருத்தப்படுவேன் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு (என்டிடிவிக்கு) அளித்துள்ள பேட்டியில், இலங்கை பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார். இந்தப் பேட்டி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈழ ஆதரவாளர்களிடையே பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

அந்த பேட்டியில் முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதாவது ..

விடுதலைப் புலிகளின் நோக்கம் உன்னதமானது. நல்ல தீர்ப்புக்காக உயர்ந்த நோக்கத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ் ஈழம் உருவாக்கப்பட வேண்டும் என்பது அற்புதமான கொள்கை. ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றுமையின்மையால் அது தவறான பாதைக்கு திரும்பி விட்டது. அவர்களது லட்சியம் பெரிது. ஆனால் கையாண்ட முறை தவறாகி விட்டது.

பிரபாகரன் எனது நல்ல நண்பர், பயங்கரவாதி அல்ல. அவருடைய இயக்கத்தி்ல் பயங்கரவாதிகள் இருக்கலாம். அது பிரபாகரனுடைய தவறு அல்ல.

தீவிரவாதம் வேறு, இது வேறு. பிரபாகரனைப் பொறுத்தவரையில் எனக்கும், அவருக்கும் இடையே ஒரே ஒரு முறைதான் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பிரன்ட்லைன் இதழுக்கு அவர் பேட்டி அளித்தபோது, நீங்கள் வெற்றி பெற்று தமிழ் ஈழம் மலர்ந்தால் ஜனநாயக ஆட்சியை நடத்துவீர்களா என்று கேட்டனர். அதற்கு பிரபாகரன், இல்லை, சர்வாதிகார ஆட்சிதான் நடக்கும் என்றார். அது மட்டும்தான் எனக்கு கருத்து மாறுபாடாக அமைந்தது.

இலங்கையில் தாக்குதலில் உயிரிழப்புகளை கேள்விப்படும் போது நான் மிகவும் மனம் வருந்துகிறேன். ஈழத்தமிழர் வாழ்வில் விரைவில் விடிவெள்ளி பிறக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பிரபாகரனை எதிர்க்கிறேன் – ஜெயலலிதா.

jayalalitha.jpgஈழத்தில் நடந்து வரும் தீவிரவாதத்தை எதிர்க்கிறேன். இதனால் பிரபாகரனை எதிர்க்கிறேன். அதேசமயம், ஈழத் தமிழர்களின் உரிமைகளையும், அவர்களது போராட்டத்தையும் நான் ஆதரிக்கிறேன் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

நாகர்கோவிலில் நேற்று அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினை ஆதரித்து ஜெயலலிதா பிரசாரம் செய்தார். பிரசாரத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார்.

அப்போது, இலங்கை தமிழர் பிரச்சினையில் அ.தி.மு.க. நிலைப்பாடு என்ன என்று செய்தியாளர்கள் கேட்டபோது, ஈழத் தமிழர்களுக்கு அ.தி.மு.க. என்றுமே ஆதரவுதான். ஆனால் அங்கு நடக்கும் தீவிரவாதத்துக்கு எதிராக உள்ளோம். அதனால் பிரபாகரனை எதிர்க்கிறோம் என்றார்.

சேது சமுத்திரத் திட்டத்தை முதலில் ஆதரித்து விட்டு இப்போது எதிர்ப்பது ஏன் என்று கேட்டதற்கு, மீனவர்கள் நலனுக்கு எதிரான திட்டமாக சேதுசமுத்திர திட்டம் இருப்பதால் அதனை நாங்கள் எதிர்க்கிறோம் என்று விளக்கினார் ஜெயலலிதா.

காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. கூட்டணி சேராததால், தேர்தலுக்குப்பின் அ.தி.மு.க.வின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, எங்களது நிலைப்பாட்டை பொறுத்திருந்து பாருங்கள். அதிமுக வின் சக்தி தேர்தலுக்குப்பின் தெரிய வரும் என்றார்.

மேல் மாகாணத்தில் தேர்தல் வன்முறைகள் அதிகரிப்பு

election.jpgகடந்த மாகாண சபைத் தேர்தல்களுடன் ஒப்பிடும் போது மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பிலான வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்திருப்பதாகத் தேர்தலை கண்காணிப்பதற்கான அமைப்பான பவ்ரல் தெரிவித்துள்ளது.  இது தொடர்பில் அவ்வமைப்பின் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கருத்துத் தெரிவிக்கையில்;

மேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் எமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்த போதும் எம்மால் 47 சம்பவங்களையே உறுதிசெய்ய முடிந்துள்ளது. இதில் 37 சம்பவங்கள் பெரியளவானதாகும்.

அதாவது கம்பஹாவில் ஜே.வி.பி. உறுப்பினர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு ஒரு ஆதரவாளர் பலியாகி மற்றொருவர் காயமடைந்த சம்பவத்துடன் மேலும் 16 தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதேவேளை கட்சிகளின் அலுவலகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்களையும் நாம் பதிவுசெய்துள்ளோம்.

நாம் சிறிய சம்பவங்களாக 10 முறைபாடுகளை பதிவு செய்துள்ளோம். இது சட்டவிரோத முறையில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை மற்றும் அரச சொத்துக்கள் துஷ்பிரயோகம் என்பன அடங்குகின்றன.

மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மொத்தமாக நாம் 47 முறைப்பாடுகளைப்பெற்ற நிலையில் மேல்மாகாண சபையில் தேர்தல் நடைபெற 6 தினங்கள் இருக்கையில் 47 முறைப்பாடுகளைப்பெற்றுள்ளோம். எனவே கடந்த மாகாண சபை தேர்தலுடன் இதுவரை இடம்பெற்ற சம்பவங்கள் சமனாக உள்ளபோதும் தேர்தல் நெருங்கும் போது சம்பவங்கள் மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

உள்ளூராட்சி சட்டமூலத்தால் எவருக்கும் பாதிப்பில்லை; 12.5% வெட்டுப்புள்ளி மீண்டும் வருமென்பதில் உண்மையில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முறை மாற்றத்திற்கான புதிய திருத்தச் சட்டமூலத்தில் 12.5% வெட்டுப்புள்ளி உள்ளடக்கப்பட்டுள்ளதாக மேற்கொள்ளப்படும் பிரசாரத்தில் எதுவிதமான உண்மையும் கிடையாது என தேர்தல் மறுசீரமைப்புக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவரான அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

அதேநேரம், தற்போதைய 5% வெட்டுப்புள்ளியும் இல்லாமற் செய்யப்பட்டு, உறுப்பினர்களின் தொகையின் அடிப்படையில் தொகுதிக்குத் தொகுதி மாறுபாடடையும். வெட்டுப்புள்ளி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் குணவர்தன, இதனால் சிறுபான்மைக் கட்சிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதெனவும் தெரிவித்தார்.

புதிய சட்ட திருத்தத்தின்படி, உள்ளூராட்சிமன்றங்கள் சில புதிதாக உருவாக்கப்படவுள்ளன. பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், புதிய முறையின்படி 70%, தொகுதி வாரியாகவும், 30% விகிதாசார முறைப்படியும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று தெரிவித்தார். இந்தத் திருத்தச் சட்டமூலம், கடந்த இரண்டு வருடங்களாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடப்பட்டு கொண்டு வரப்பட்டதொன்றாகும்.

 இனி, இதனை மாகாண சபையில் நிறைவேற்ற வேண்டும். கட்சியின் சுயலாபத்தைப் பற்றிச் சிந்திக்காமல், நாட்டைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். தொகுதிவாரி தேர்தல் முறைதான் நாட்டுக்கு நன்மை பயக்கும். தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர் மூலம் அபிவிருத்தியைக் கிரமமாக முன்னெடுக்க முடியும். மோசடி மிகுந்த விகிதாசார தேர்தல் முறையை மாற்ற மக்கள் விரும்புகிறார்கள். எனவே, தொகுதிவாரி தேர்தல் முறையினை நன்றாக ஆராய்ந்து பார்த்தால், அதிலுள்ள நன்மை, தீமையைப் புரிந்துகொள்ள முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.