மகிந்த ராஜபக்ச

மகிந்த ராஜபக்ச

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்டு மனமுடைந்தாராம் மகிந்த – நாமல் ராஜபக்ஷ புதிய கதை !

பாலச்சந்திரன் உயிரிழந்த செய்தி கேட்ட முன்னாள் ஜனாதிபதியும் எனது தந்தையுமான மகிந்த ராஜபக்ச மிகவும் மன வருத்தம் அடைந்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபாகரனின் மகனது மரணச் செய்தி அதிகாலையில் கிடைக்கப்பெற்றது. இந்தச் செய்தியைக் கேட்டு எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார். எனது தந்தை மிகவும் கவலை அடைந்து நான் பார்த்த சந்தர்ப்பம் இதுதான். அதிகாலையில் வந்த அந்த தொலைபேசிச் செய்தி தொடர்பில் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றது. பிரபாகரனின் இளைய மகன் போரில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பதால் எனது தந்தை மிகவும் மனவருத்தம் அடைந்தார்.

இந்த மரணம் வேண்டுமென்று செய்யப்பட்ட ஒன்று அல்ல. தவறுதலாக நடந்தது. பிரபாகரனின் மகன் வேண்டுமென்றே கொல்லப்பட்டார் என சிலர் கதைகளை உருவாக்கினர். உண்மை அதுவல்ல. இது தவறுதலாக நடந்த விடயம் என்பதுகூட பின்னர் தான் தெரியவந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

புலம்பெயர்ந்த தமிழருக்காக அநுர வீட்டைப் பறித்துவிட்டார் – மகிந்த ராஜபக்ச புலம்பல்

 

இல்லம் பறிக்கப்படுமென்றும் எனது பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் நீக்கப்படுவார்களென்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூறியது, தேர்தலில் அவர்களுக்கு உதவிய தமிழ் புலம்பெயர்ந்தோரின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாகும் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் உட்பட ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுத்தது எனது அரசாங்கம்தான் என்று கூறிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த , நாட்டின் அச்சுறுத்தலை எதிர்கொண்ட அரச தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் பாதுகாப்பை இழந்ததற்கு பொதுமக்களின் எதிர்வினையை வரவிருக்கும் தேர்தல்களில் அரசாங்கம் அறிய முடியும் என்றும் பாதுகாப்பு அல்லது உத்தியோகபூர்வ இல்லம் குறித்து ஒருபோதும் புகார் செய்ய மாட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தற்போது செய்வதற்கு எதுவுமறியாது முன்னுக்குப் பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார். கடைசியில் இனவாதச் சீட்டையும் வைத்து ஆட்டத்தை ஆட நினைக்கின்றார். சிங்கள, தமிழ் அரசியல் தலைமைகள் இனவாதத்தை கக்கி உணர்ச்சி பொங்கப் பேசி வாக்கு வங்கியைத் தக்க வைக்க முடியும் என்ற பழைய சமன்பாட்டை கைவிட்டு மக்களோடு நின்றால் மட்டும் தான் மக்கள் ஆதரிப்பார்கள் என்ற உண்மையை புரிந்துகொள்ள வேண்டும்.

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

புலிகளை அழித்ததால் நழுவிய மகிந்த ராஜபக்சவின் நோபல் பரிசு கனவு – மகன் நாமல் கவலை !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தால் அமைதிக்கான நோபல் பரிசை வென்றிருப்பார், ஆனால் அவர் செய்ய வேண்டியதைச் செய்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். .

“விடுதலைப் புலிகளை நசுக்கியதற்காக நாமும் எங்கள் பரம்பரையும் கூட கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்ற உண்மையை நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அறிந்திருந்தோம். எத்தகைய சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் எமது அரசியலைத் தொடர்வோம் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் உடல் பொது மக்கள் பார்வைக்காக பாதுக்காக்கப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச சகா !

மகிந்த ராஜபக்சவின் உடல் பொது மக்கள் பார்வைக்காக பாதுக்காக்கப்பட வேண்டும் – மகிந்த ராஜபக்ச சகா !

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உடல் எதிர்கால சந்ததியினருக்காக பொதுமக்கள் பார்வைக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று முன்னாள் துணை சபாநாயகர் அஜித் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக மஹிந்த ராஜபக்ச நாட்டின் புகழ்பெற்ற நபராக மாறினார் என தெரிவித்த அஜித் ராஜபக்ச, எனவே, அவரது மறைவுக்குப் பிறகு, மறைந்த சோவியத் தலைவர் விளாடிமிர் லெனின் மற்றும் வியட்நாமின் புரட்சிகரத் தலைவர் ஹோ சி மின் போன்ற மஹிந்த ராஜபக்சவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

“நான் கனக்கப் பார்த்திருக்கிறேன், நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுர மறந்து விடுகிறார்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த

“நான் கனக்கப் பார்த்திருக்கிறேன், நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுர மறந்து விடுகிறார்” முன்னாள் ஜனாதிபதி மகிந்த

ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை 4.6 மில்லியன் வாடகையுடைய அரசாங்க வீட்டிலிருந்து கிளப்ப அறிவித்தல் வழங்கப்பட்டுவிட்டது. இது தென்னிலங்கை அரசியல் பரப்பில் பாரிய வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

இந்நிலையில் , இது தொடர்பில் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, “நான் மகிந்த ராஜபக்ச என்பதை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மறந்து விடுகிறார். நான் எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். அரசியல் பழிவாங்கல் முதல் துன்புறுத்தல் வரை, எனது அரசு இல்லம் என்னிடமிருந்து பறிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி நினைத்தால், நான் வெளியேறத் தயாராக இருக்கிறேன். அவர் எனக்கு எழுத்துப்பூர்வ கோரிக்கையை அளிக்கட்டும்” என தெரிவித்துள்ளார்.

இதேவேளை நேற்றைய தினம் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகை குறைப்பு மற்றும் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில் மகிந்த ராஜபக்ச தரப்பினருக்கும் – என்.பி.பி தரப்பினருக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தன.

எனினும் இவை தொடர்பில் பாராளுமன்றத்தில் பதிலளித்திருந்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “எச்சரிக்கைகள் தேவைப்படும் விஷயங்களில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட வேண்டும். சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு, அரசாங்கம் கடுமையான முடிவுகளை எடுக்க இயலாது என்று காட்டுகிறார்கள். நாங்கள் கடுமையான முடிவுகளை எடுக்க முடியும்,” என்று கூறியிருந்தார்.

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

மகிந்த வீட்டுக்கு மாத வாடகை 46 லட்சம் மக்களின் வரிப் பணத்தில் !

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ இல்லங்களையும் அரசாங்கம் மீளப்பெறும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார். களுத்துறை – கட்டுகுருந்தவில் நேற்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த ஜனாதிபதி, தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒரு குடியிருப்பு அல்லது அவர்களின் சம்பளத்தில் 1/3 பங்கைப் பெற உரிமை உண்டு. அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க உதவித்தொகையாகக் கட்டுப்படுத்த முடிவுசெய்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் மூன்றில் ஒரு பங்கு ஆகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கான வாடகை மாதத்திற்கு ரூ. 4.6 மில்லியன் ஆகும். இதில் நில மதிப்பு சேர்க்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவர்களது வீடுகளை காலி செய்யவோ அல்லது வாடகையை செலுத்தவோ தெரிவுகளை வழங்குவோம்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகை தவிர அனைத்து அமைச்சர் பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்கள் அல்லது பிற பொருத்தமான பயன்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார்.

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

முன்னாள் ஜனாதிபதிகள் பாதுகாப்பு செலவுகளுக்காக வருடாந்தம் 1100 மில்லியன் ரூபாய் – உடன் நடவடிக்கை எடுத்த அரசாங்கம்!

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக அதிகப்படியான பணம் ஒதுக்கப்படுவது தொடர்பாக தேசிய மக்கள் சக்தி கடந்த கால தேர்தல் பிரச்சாரங்களின் போது குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில் ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி மக்கள் மீதான வரிச் சுமையை குறைப்பதில் தமது அரசாங்கம் அதிக கவனம் செலுத்தும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு செலவுகள் தொடர்பில் ஆராய்வதற்காக தனியான குழு ஒன்று நியமிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது எனவும் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டியிருந்தது.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு வருடாந்தம் செலவிடப்படும் மொத்த தொகையில் 326 மில்லியன் ரூபாய் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவிடப்படுவதாக பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்காக வருடாந்தம் சுமார் 1100 மில்லியன் ரூபா செலவிடப்படும் நிலையில் மகிந்த ராஜபக்சவுக்காக அதில் 326 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இது மொத்த தொகையில் மூன்றில் ஒரு பகுதியாகும்.

முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக சுமார் 60 பாதுகாப்பு அதிகாரிகளை பணியில் அமர்த்தினால் போதுமானது என, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட குழு வழங்கிய பரிந்துரைகளின் படி, பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும், மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளதன் மூலம் அவரின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் ஏற்படவில்லை எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை – மகிந்த ராஜபக்ச நம்பிக்கை!

பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அரசியலில் இருந்து ஒருபோதும் ஓய்வுப் பெறப் போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை குறிப்பிட்டார்.

 

இது தொடர்பாக மேலும் கருத்துரைத்த அவர், தேர்தலில் நாம் எதிர்ப்பார்த்த வெற்றி எமக்கு கிடைத்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்ததில் எமக்கு எதுவும் பிரச்சினையில்லை. புதியவர்களுக்கும் இடமளிக்க வேண்டும்.

 

தேசிய மக்கள் சக்தியை தேர்தலில் வெற்றிபெற செய்தவர்கள் இந்த நாட்டு மக்கள். நாங்கள் மக்களின் தீர்மானத்திற்கு மதிப்பளிக்கின்றோம்.

 

புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்தாலும் எமது ஆட்சிக்காலத்தில் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்ந்தும் முன்கொண்டு செல்லப்படும் என நம்புகின்றோம்.

புதிய அரசாங்கத்தில் அரசியல் பழிவாங்கல்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என்றே நினைக்கின்றேன்.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடிவருகின்றோம்.

அதேபோல் அரசியலில் இருந்து விலகுவதற்கு இதுவரை எந்த தீர்மானங்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டார்.

அனுர தரப்பு பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் என்னை பாதுகாத்துக் கொள்வார்கள் – மகிந்த ராஜபக்ச

அரசாங்கம் தமக்கான பாதுகாப்பை குறைத்தாலும், மக்கள் தன்னை பாதுகாத்துக் கொள்வார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

அண்மையில் மகிந்தவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது இதனை தெரிவித்துள்ளார்.

 

தனது பாதுகாப்பில் தான் அதிக கவனம் செலுத்துவதில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு குறித்து தான் அதிருப்தி அடையவில்லை என்றும் மகிந்த தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய அரசாங்கம் தனது குடும்பத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்தினால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் விசாரணைகளுக்கு ஆதரவளிப்பதாக மகிந்த தெரிவித்துள்ளார்.

 

அரசாங்கத்திற்கு வேறு வேலையில்லாமல் பல குற்றச்சாட்டு சுமத்தி விசாரணைகளை நடத்தி வருகின்றது. செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருந்தாலும் அதனை விட்டுவிட்டு இவற்றினை செய்கின்றது.

 

பழைய கோப்புகளை தூக்கிக் கொண்டு சுற்றுவதை விட்டுவிட்டு மக்களின் வாழ்க்கை சுமையை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அரச வாகனங்களை காலம் தாண்டி பயன்படுத்தி வரும் மகிந்த ராஜபக்ச!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் பயன்படுத்திய மேலதிக அரசாங்க வாகனங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த வாகனங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பல தடவைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் நேற்று வரை அவை கையளிக்கப்படவில்லை என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ஒருவர் ஓய்வு பெற்ற பின்னர் 03 அரச வாகனங்களை மாத்திரம் பயன்படுத்துவதற்கு உரிமையுள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 அரச வாகனங்களையும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 15 ​​அரசாங்க வாகனங்களையும் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.