மகிந்த ராஜபக்சவின் அடிப்படை உரிமை மனு நிராகரிக்கப்பட்டது !
பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தாக்கல் செய்த அடிப்படை மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
முறையான மதிப்பீட்டின்றி தனது பாதுகாப்பு குறைக்கப்பட்டதால் தமது அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளது என உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ச மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் நேற்று குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.