மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..? 

மூன்று லட்சம் ரூபா நிலுவைத்தொகையை செலுத்தாத மகிந்த ராஜபக்ச..?

300,000 ரூபாய் நிலுவைத் தொகை செலுத்தப்படாததால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வெளியிட்ட எந்த தகவலும் உண்மையானது இல்லை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை நேற்றைய தினம் வெளியிட்ட நீர் வழங்கல் சபை, முன்னாள் ஜனாதிபதியின் இல்லத்திற்கு நீர் விநியோகத்தில் எந்த தடங்கலும் இல்லை என்று தெரிவித்துள்ளது. எனினும், மகிந்தவின் வீட்டிற்கு அருகில் உள்ள முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் வசித்து வந்த பகுதியொன்றில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே செய்திகளின் உண்மைத்தன்மை – அதனுடைய பின்னணி எதனையும் நோக்காது தென்னிலங்கை மற்றும் வடக்கு இலங்கை ஊடகங்கள் பலவும் மகிந்த ராஜபக்ச தொடர்பான போலியான தகவல்களை பகிர்ந்திருந்த நிலையிலேயே தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *