பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !

‘பரீட்சை பாஸ் பண்ணாட்டிலும் தற்கொலை : காதலி பார்க்க வராவிட்டாலும் தற்கொலை’ – சவால்களை எதிர்கொள்ள திணறும் இளைஞர்கள் !

 

யாழில் காதலர் தினத்தை கொண்டாட காதலி மறுத்ததால் கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், காதலர் தினத்தை கொண்டாட யாழ்ப்பாணம் செல்ல குறித்த இளைஞர் அழைத்துள்ளார். இதற்கு காதலி மறுப்பு தெரிவித்ததன் காரணமாக இளைஞர் கிணற்றில் குதித்து உயிரைமாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதையடுத்து தர்மபுரம் காவல்துறையினர் கிணற்றிலிருந்து இளைஞனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மைய காலங்களில் வடக்கு மாகாணத்தில் தற்கொலைகள் மலிந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. போதைப்பொருள் பாவனைக்காக பணம் இல்லை, பரீட்சை பெறுபேறுகளில் திருப்தி இல்லை, பெற்றோர் பைக் வாங்கி தரவில்லை போன்ற சாதாரண காரணங்களுக்கு கூட இளைஞர்கள் தற்கொலை செய்வதை அவதானிக்க முடிகிறது

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *