பா.உ சிறிதரன்

பா.உ சிறிதரன்

ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !

ஆனையிறவு உப்புக்கு உரிமைகோரும் பா உ சிறிதரன் !

ஆனையிறவு உப்புக்கு இவர்கள் ராஜலுனு என்று பெயர் வைத்ததைக் கண்டித்து தான் கொடுத்த அழுத்தத்தால் தான் அதற்கு ‘ஆனையிறவு உப்பு’ என்று பெயர் வைக்கப்பட்டதாக பா உ சிறிதரன் ரீல் விட்டுள்ளார். அமைச்சர் ஹெந்து நெத்திக்கு போன் பண்ணி அழுத்தம் கொடுத்ததால் தான் அதன் பெயர் மாற்றப்பட்டதாக உரிமை கோருகின்றார். இதனை மறுத்த பா உ இளங்குமரன் 2020க்களில் சிறிதரனுடைய உள்ளுராட்சி சபைதான் அதற்கான அனுமதியை வழங்கியிருக்க வேண்டும் என்றார்.

ஆனையிறவு உப்பளம் ஆரம்பிக்கப்பட இருப்பதை அறியாத பா உ சிறிதரன் அதனை இந்தியாவிடம் கையளிக்குமாறு பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார். ஆனால் பா உ சிறிதரன் இதனைத் தெரிவித்து சில நாட்களிலேயே ஆனையிறவு உப்பளத்தை அமைச்சர் சந்திரசேகரன் உட்பட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.

அந்நிகழ்வில் உரையற்றிய அமைச்சர் சந்திரசேகர், இதற்கு ஆனையிறவு உப்பு என்றே பெயரிட உள்ளோம், ஆனால் ஏற்கனவே முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஒப்பந்தத்தை மாற்ற சிறிதுகாலம் எடுக்கும் என்பதைச் சுட்டிக்காட் இருந்தார். தற்போது அமைச்சர் சந்திரசேகரன் உறுதியளித்தபடி ஆனையிறவு உப்பு என்ற பெயரிலேயே ஆனையிறவு உப்பு சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றது.

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார் ! பா உ சிறிதரன் – “கறன்ட் கம்பம் இல்லாம கறன்ட் வராதில்லா” பா உ இளங்குமரன்

பா உ சிவஞானம் சிறிதரன் பா உ இளங்குமரனின் தொழிலை நையாண்டி செய்து கிளிநொச்சியில் உரையாற்றினார். தனக்கு கட்சிக்குள் நடக்கின்ற சொந்தக் கதை சோகக் கதைகளை எல்லாம் கொட்டித் தீர்த்து கிளிநொச்சியில் உள்ள நான்கு பிரதேச சபைகளைக் கைப்பற்றப் பெரும் பிரயத்தனம் எடுத்துவருகின்றார். கிளி கனிஸ்டா மகாவித்தியாலயத்தில் அதிபராக இருந்தவர். இன்றும் அப்பாடசாலையின் செயற்பாடுகளில் கட்டுப்பாடுகளை வைத்துள்ளார். கிளிநொச்சி பா உ சிறிதரனின் கோட்டை என்றால் மிகையல்ல. சிறிதரன் ஏன் எனக்கு இவ்வளவு பயப்படுகின்றார் என்று சமூகம் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கேள்வி எழுப்பினார். அவருடைய பிரச்சாரப் பீரங்கி அலனைக் காப்பாற்ற அவர் எடுத்த முயற்சியை நாங்கள் முறியடித்தோம். அது தான் அவருக்குக் கோபம் என்றார் பா உ இளங்குமரன்.

 

கிளிநொச்சிக் கூட்டத்தில் அண்மையில் உரையாற்றுகின்ற போது பா உ இளங்குமரன் மின்சார சபையில் ஊழியராகப் பணியாற்றியதை கிண்டலடித்து: “இளங்குமரனுக்கு கறன்ட் கம்பம் தான் தெரியும் ஆனால் நாங்கள் கறன்ட் அடித்தோம் என்றால் தாங்கமாட்டார்” எனத் தனது தொழில் மேலாண்மையை வெளிப்படுத்தினார். இதே போல் பா உ இளங்குமரனின் தொழிலைக் கிண்டலடித்து ‘நாயைப் பிடியுங்கோ என்று வீடுவீடாய் மீற்றர் ரீடிங் எடுத்தவர், தன்னைப் போல் எம்பிபிஎஸ் படிக்காதவர்’ என்ற தொனியில் கருத்து வெளியிட்டு இருந்தார்.

மற்றுமொரு சந்தர்ப்பத்தில் கிளி ஊடகவியலாளர் தமிழ்செல்வனை ‘வடக்கத்தையான்’ என்று பா உ சிறிதரன் திட்டிய ஒளிப்பதிவு வெளியாகி இருந்தது. அதுபோல் பா உ அர்ச்சுனா அமைச்சர் சந்திரசேகரை மலையகத் தமிழர்கள் பற்றிய பொதுப்புத்தியில் இருந்து கைநாட்டு எழுத வாசிக்கத் தெரியாதவர் என நையாண்டி பண்ணியதோடு தான் கப்பல் விட்ட பரம்பரையிலிருந்து வந்ததாகவும் மலையக மக்களை கள்ளத் தோணிகள் கப்பலில் வந்தவர்கள் எனவும் தெரிவித்திருந்தார். பா உ இரா சாணக்கியனும் அமைச்சர் சந்திரசேகரனது நாசியில் உள்ள ஒவ்வாமைப் பிரச்சினையை வைத்து நளினம் செய்திருந்தார். தமிழ தமிழ் தேசியத் தலைமைகளுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசியலை எதிர்கொள்ளும் அரசியல் வலிமை இல்லாததால் அவர்கள் தங்களது சாதி, பிரதேச, மதவாத அரசியலையும் எதிரணியினரின் தொழிலையும் வைத்து அரசியல் செய்யும் மூன்றாம்தர நிலைக்கு கீழிறங்கி உள்ளனர்.

இதே மூன்றாம் தர அரசியலைஇ தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தொகுதி மக்களுக்கு எதிராகவும் இந்த தமிழ் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல்வாதிகள் செய்கின்றனர். இவர்கள் விளிம்புநிலை மக்களை சமூகத்தில் பல்வேறு வகையிலும் ஒடுக்கப்படும் மக்களை, தொழிலாளர்களை, ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை. அதிபர்கள், மருத்துவர்கள் என மேட்டுக்குடியைச் சேர்ந்த பரம்பரை மேல் தட்டினரையே பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர் என்பதாலேயே தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் திரும்பியுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியில் பா உ இளங்குமரன் என்ற சாதாரண மின்சாரசபை ஊழியரும் உள்ளார். சிறிபவானந்தரா மருத்துவ கலாநிதி இவ்வாறு பல தரப்பட்ட சமூக தொழில் பிரிவுகளில் உள்ளவர்களும் தோழமை அடிப்படையில் மக்களோடு மக்களாக இணைந்து செயற்படுகின்றனர்.

சிறிதரனின் கருத்துக்களுக்கு பதிலளிப்பது போல் அமைச்சர் சந்திரசேகர் கருத்துத் தெரிவிக்கையில் நீங்கள் தமிழ் தமிழ் என்று சொல்லிக்கொண்டு பிரிந்து நின்று குழாயடிச் சண்டை பிடிக்கின்றீர்கள் என்று குற்றம்சாட்டினார்.

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

சட்டத்தின் ஓட்டைகளைத் தேடும் பா உ அர்ச்சுனா ! – பா உ சிறிதரனின் கோட்டையான கனிஸ்டாவில் பாலியல் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் கைது !

பா உ அர்ச்சுனாவுக்கு எதிராக மேலும் மேலும் வழக்குப் பதிவுகள் முறைப்பாடுகள் அதகரித்துச் செல்கின்றது. சகட்டு மேனிக்கு மற்றவர்களைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வைத்தது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது என பா உ அர்ச்சுனாவை சட்டங்கள் இறுக்குகின்றன. ரிக் ரொக் சாளினியைச் சொன்னதை சுவஸ்திகா பற்றிச் சொன்னதாக பாராளுமன்றப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டையை பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் சட்டக்குழு தேடுகின்றது.

மதிப்பிற்குரிய பாராளுமன்ற உறுப்பினர் என சக பாராளுமன்ற உறுப்பினர்களை அழைக்க வேண்டிய இடத்தில் தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பா உ களை கத்தரித் தோட்டத்து வெருளிகள் என அர்ச்சுனா தெரிவித்து இருந்தார். ஆனால் தற்போது நான் அவர்களை பெயர் சொல்லிச் சொல்லவில்லை என்கிறார். அர்ச்சுனா தற்போது சட்டத்தின் ஓட்டைகளைத் தேடிப்பிடிக்க முயற்சிக்கின்றார்.

அர்ச்சுனாவுடைய போக்குகள் தொடர்பில் அர்ச்சுனா பச்சைக்கொடி காட்டிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் அர்ச்சுனாவின் குறளிவித்தைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. “எங்களுடைய கட்சிக்கு என்று பண்புகள் இருக்கின்றது. நாங்கள் பெண்களை மதிக்கின்றோம், எங்களுடைய கட்சி சாதி, பிரதேச வேறுபாடுகள். பார்ப்பதில்லை. ஏனைய மதங்களை மதிக்கின்றோம். ஆனால் பா உ அர்ச்சுனா இந்த விடயங்களில் திருந்த வேண்டும்” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்துள்ளார். யாழில் இருந்து வெளிவருகின்ற ஜப்னா கலரி காணொலி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்து இருந்தார்.

பா உ அர்ச்சுனா போல் மற்றவர்களைக் கொச்சைப்படுத்தி உரையாற்றிய தமிழரசுக் கட்சியின் பா உ இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் பீமல் ரத்நாயக்கா காட்டமான பதிலை பாராளுமன்றத்தில் தெரிவித்து இருந்தார். சாணக்கியனின் அரசியல் வரலாற்றைப் புரட்டிய அமைச்சர் பீமல் ரத்நாயக்கா மோசமான மோசடியாளர்களான ராஜபக்சக்களுடன் அரசியலுக்கு வந்து அவர்களை நியாயப்படுத்தியவர், பாதகமான செய்களில் ஈடுபட்ட பிள்ளையானோடு அரசியல் செய்தவர் என்றெல்லாம் சாணக்கியனை கிழித்துத் தொங்கவிட்டார் அமைச்சர் பீமல் ரத்நாயக்கா. சாணக்கியன் மீது நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். பொன்னம்பலம் கஜேந்திரகுமாரோடு தங்களுக்கு அரசியல் முரண்பாடுகள் இருந்தாலும் அவரின் பண்பாடான நடத்தையை தான் மதிப்பதாகவும் பீமல் அங்கு சுட்டிக்காட்டினார்.

பா உ சிறிதரனின் பாடசாலையாக அறியப்பட்ட கனிஸ்ட்டா மகாவித்தியாலயத்தின் விளையாட்டு பயிற்றுவிக்கும் ஆசிரியர் அலன் நேற்று கிளிநொச்சி அறிவியல் நகர்ப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். இவர் தற்போது கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகப் பரபரப்புக்குள்ளான இச்செய்தி கிளிநொச்சி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 16 வரையான சிறார்களை அங்கிருந்த மலசலகூடத்திற்கு அழைத்துச்சென்று பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுத்தியதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர் அலன் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக தன்மீதும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக தற்சமயம் வெளிநாட்டில் உள்ள ஒருவர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா ரெஜிவொல்க் என்ற காணொலி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல ! ஆய்வாளர் வி சிவலிங்கம்

பா உ அர்ச்சுனா போல் கஜேந்திரகுமார், செல்வம், சிறிதரன் எல்லோரும் உதிரிகள் ! இவர்கள் யாழில் சில ஊர்களின் பிரதிநிதிகள் ! வடக்கு – கிழக்கு பிரதிநிதிகள் அல்ல !

ஆய்வாளர் வி சிவலிங்கம் அவர்களோடு ஒரு உரையாடல்

 

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சியில் பா உ சிறிதரன் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும் – ஆய்வாளர்கள் கணிப்பு !

தமிழரசுக் கட்சிக்குள் பா உ சிறிதரனும் எம் ஏ சுமந்திரனும் இருக்கும்வரை கட்சி வளர்ச்சியடையாது என தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்கள் என தங்களை முன்நிறுத்தும் ஊடகவியலாளர் நிலாந்தன் மற்றும் பொங்கு தமிழ் கணேசலிங்கம் ஆகியோர் டான் தமிழ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஆய்வாளர் வி சிவலிங்கம் பா உ எஸ் சிறிதரன் தமிழரசுக் கட்சியின் முடிவுகளுக்கு கட்டுப்பட முடியாவிட்டால் அவர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் அல்லது தானாக கட்சியிலிருந்து வெளியேற வேண்டும் எனத் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சியிலிருந்து இவ்விருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாதது. கட்சி தற்போது எம் ஏ சுமந்திரனின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதாலும் மத்திய குழுவில் சுமந்திரனுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதாலும் பா உ சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பொதுத் தேர்தலுக்கு முன்னதாக பா உ சிறிதரன் வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாராளுமன்றத்தில் அவர் ஆசனத்தை வென்று எம் ஏ சுமந்திரன் ஆசனத்தை இழந்தார்.

இருந்த போது பா உ சிறிதரனால் கட்சியை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தற்போது உள்ளுராட்சி மாகாணசபைத் தேர்தலில் வேட்ப்புமனு தாக்கல் செய்வதில் இன்னுமொரு நெருக்கடிநிலை உருவாகும்.

ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கம் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். பா.உ சிறிதரன் இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது, மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதாக இருந்தால், முதலில் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால் 50 சதவீத தொகுதி மற்றும் விகிதாசார தேர்தல் முறைமைக்கு தென்னிலங்கையிலிருந்து கடும் எதிர்ப்பு எழுந்தது. நாமும் அதனை எதிர்க்கிறோம். மாகாணசபைத் தேர்தல் இவ்வாறானதொரு இழுபறி நிலையில் தான் இருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டால், முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு நான் தயாரில்லை. அதேபோன்று எமது கட்சி வழக்கு நிலுவையில் இருக்கிறது. கட்சி உறுப்பினர்களே வழக்கினைத் தாக்கல் செய்திருக்கின்றனர். இது தாயை நீதிமன்றத்தில் நிறுத்திவிட்டு, தாயிடம் உணவு கேட்பதுபோல் உள்ளது. நாங்கள் செய்வது பதவிகளுக்கான அரசியல் அல்ல. மாறாக இனவிடுதலையை இலக்காகக்கொண்ட அரசியலாகும். பதவிகளுக்காக அரசியல் செய்வது தவிர்க்கப்படவேண்டும். இவ்வாறானதொரு சூழ்நிலையில் வடமாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை என தெரிவித்துள்ளார்.

தங்களை தமிழ் தேசியத்தின் ஆய்வாளர்களாக முன்நிறுத்தும் நிலாந்தனும் பொங்குதமிழ் கணேசலிங்கமும் தமிழ் தேசியம் பேசுகின்ற கட்சிகளுக்கிடையே உள்ள தனிப்பட்ட முரண்பாடுகளே தமிழ் தேசியம் பலவீனப்படுவதற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் குறிப்பிடுகையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் தன்னை வளர்த்துக்கொள்ளத் தவறிவிட்டது எனச் சுட்டிக்காட்டினர்.

தேசிய மக்கள் சக்திக்கும் பா உ அர்ச்சுனாவுக்கும் அச்சமடைந்து தான் தமிழ் தேசியக் கட்சிகள் புதிய கூட்டணிகளை உருவாக்குவதாக நிலாந்தனும் கணேசலிங்கமும் தெரிவிக்கின்றனர்.

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

அத்துமீறும் இந்திய மீனவர்களை பா உ சிறிதரன் பார்வையிட்டார் ! பாதுகாக்கும் படி பாஜாக தமிழகத் தலைவர் அண்ணாமலை கோரிக்கை ! பாதிக்கப்படும் இலங்கைத் தமிழ் மீனவர்களை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிடுகின்றது !

இலங்கையின் வடக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைகளை தமிழ் தேசியக் கட்சிகள் கைவிட்டுவிடு உள்ளுராட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன. ஆனால் தமிழகத்தின் பாஜாக தலைவர் அண்ணாமலை அத்துமீறி இலங்கைக் கடற்பரப்பிற்குள் வரும் மீனவர்களை நடுக்கடலில் வைத்து கைது செய்வதாகக் கூறி வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்திய மீனவர்களைப் பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை உடனடியாக நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறும் அண்ணாமலை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் அத்துமீறும் இந்திய மீனவர்கள், தங்கள் பொருளாதாரத்தை அழிக்கிறார்கள் என்று போராடிய போது அவர்களைக் கண்டுகொள்ளாத பா உ எஸ் சிறிதரன் அத்துமீறிய போது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை யாழ் சிறையில் சென்று பார்வையிட்டு அவர்களது நலன்களை விசாரித்து அறிந்தார்.

அத்துமீறி வந்து வடக்கின் மீன்வளத்தை அழிக்கும் இந்திய மீனவர்களுக்கு அங்குள்ள கட்சிகள் பெரும் ஆதரவை வழங்குகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட வடக்கு மீனவர்களைப் பற்றி தமிழ் தேசியக் கட்சிகள் மௌனமாகவே இருந்து வருகின்றன. பாராளுமன்றத்திலோ, மாகாணசபையிலோ, உள்ளுராட்சி சபைகளிலோ பன்மைத்துவ அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாததும் அதற்குக் காரணமாக உள்ளது என்கிறார் சர்வஜன அதிகாரம் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் அருண் சித்தார்த். தமிழ் தேசிய அரசியலை சைவ வெள்ளாள மேட்டுக்குடி ஆண்களே பிரதிநிதித்துவப்படுத்துவதால் ஏனைய சமூகங்களின் வலியை இந்த தமிழ் தேசியவாதிகளால் உணரமுடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கிடையே நேற்று எழுவைதீவு அனலைதீவு கடற்பரப்பில் 200 கிலோகிராம் எடையுள்ள போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் காரைநகர் மற்றும் மன்னார் பேசாலையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வடக்கிற்கான கேரளா கஞ்ஞா மற்றும் போதைப்பொருட்களின் நுழைவாயிலாக வடக்கு கடற்பரப்பு உள்ளது. இந்திய மீனவர்களே அதனை இலங்கைக்கு கொண்டுவருகின்றனர் என்பதும் தற்போது உறுதியாகி உள்ளது.

வடக்கின் தமிழர்களின் எதிர்காலம் அழிக்கப்படுகின்ற போதும் தமிழ் தேசியத் தலைமைகள் இது விடயத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுக்க மறுத்துவருகின்றனர். கடந்த வியாழக்கிழைமை வடக்கு மீனவர்கள் யாழில் உள்ள இந்தியத் துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் தமிழகத்தில் ராமேஸ்வரத்திலும் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 2024இலிருந்து 535 இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது.

வடக்கு மீனவர்கள் விடயத்தில் தற்போது தேசிய மக்கள் சக்தியினர் மட்டுமே அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றனர். கிளிநொச்சி நீதமன்றமும் தண்டனைகளை அபராதங்களை சற்று கடுமையாக்கி வருகின்றது. தமிழரசுக் கட்சியின் பா உ ரவிகரன் மீனவர்கள் விடயத்தில் தனித்துக் குரல் எழுப்பியுள்ளார். ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராமுகமாகவே உள்ளனர்.

வடக்கு மீனவர்களின் பிரச்சினையில் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சிபேதமில்லாமல் இந்திய அரசுக்கு அழுத்தங்களை வழங்கி வடக்கு மீனவர்களின் பிரச்சிகைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். இது விடயத்தில் கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் பிரச்சினையை சரியானமுறையில் இனம் கண்டுள்ளார். அவருடைய கூற்றுப்படி தமிழகத்தில் உள்ள அப்பாவி மீனவர்களைப் பயன்படுத்தி தமிழக அரசியல் செல்வாக்குடையவர்களும் பெரும் பணமுதலைகளும் லாபமீட்டுவதாகத் தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் இந்திய கடற்படை இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதற்கு முடிவுகட்ட வேண்டும். கேரளா கஞ்சா வடகடற்பரப்பிற்குள் நுழைவதற்கு முடிவு கட்ட வேண்டும்.

 

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

தொடரும் என்.பி.பி அலை – தேர்தலை பின்னுக்கு தள்ளி கால அவகாசம் கோருகிறார் பா.உ சிறிதரன் !

 

எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அநுர அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போது இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மாதத்தில் தேர்தலை நடத்துவது என்பது என்னை பொறுத்தவரை நெருக்கடியாக இருக்கும். இதற்கான காரணம் என்னவெனில், ”சாதாரண தரப் பரீட்சை, வரவு செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் உயிர்த்த ஞாயிறு போன்ற சமய நிகழ்வுகள் குறித்த காலப்பகுதியில் வருவதால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் அத்துடன் தேர்தல் திருத்தங்களில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழக்கப்பட்டுள்ள சந்தர்ப்பம் குறித்து மகிழ்ச்சி அடைவதாகவும், பெண்களுக்கு 25 வீதம் வழங்கப்பட்டுள்ளமை பாராட்டத்தக்கது என்றும் குறிப்பிட்டார்.

தேர்தலை பின்தள்ளுமாறு ஐக்கிய மக்கள் சக்தியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, எந்த தேர்தலுக்கும் முகம்கொடுப்பதற்கு நாங்கள் பின்வாங்கியதில்லை. தேர்தல் பிரசார காலப்பகுதி யாருக்கும் அநீதி ஏற்படக்கூடாது என்பதனாலே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வேட்புமனு கோருமாறு கேட்கிறோம் என தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடங்கி மாகாண சபை தேர்தல்கள் வரை அனைத்திலும் என்.பி.பி அலையே தொடரும் என அரசியல் அவதானிகள் கூறி வருகின்றனர். ஆனால் இன்னமும் தமிழரசுக் கட்சியின் உட்கட்சி பூசல் கூட முடிந்தபாடில்லை. பாராளுமன்றத்தேர்தல்களை போலவே உள்ளூராட்சி தேர்தல்களிலும் தமிழரசுக்கட்சியை விட என்.பி.பி ஆதிக்கம் செலுத்த வாய்புள்ளதையும் அவதானிக்க முடிகிறது.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தான் மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்தேசிய கட்சிகளை விட தேசியக்கட்சி ஒன்று தன் ஆதிக்கத்தை பெரும்பான்மை ஆசனங்கள் மூலம் உறுதி செய்திருந்தது. இதனை தொடர்ந்தும் தக்க வைக்கும் நோக்கில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய, அமைச்சர் பிமல் ரத்நாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் என அடுத்தடுத்து ஒவ்வொரு வார இடைவெளியிலும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கின் பகுதிகளுக்கு திடீர் விஜயம் செய்து என்.பி.பி தன்னுடைய வாக்கு வங்கியை பலப்படுத்திவருகிறது. இதனால் உள்ளூராட்சி தேர்தல் தமிழ்தேசிய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.

மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !

மக்களின் கவனத்தை ஈர்த்த உண்ணா விரதப் போராட்டம் – பா உ சிறிதரன் அணி அச்சத்தில் !

முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற வளாகத்தில் முன்னாள் போராளியான அழகரத்தினம் வர்ணகுலராசா பத்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நீதி கிடைக்கும் வரை சாகும் வரையான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை பெப்ரவரி 14 ஆம் திகதி தொடக்கம் நடத்தி வந்தார். நீர் மற்றும் உணவு தவிர்த்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

அவர் முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளில் அரைவாசி தானும் நிறைவேறினால் போதும் என்ற நிலைப்பாட்டுடன் வர்ணகுலராசாவின் சாகும்வரை போராட்டம் முன்னாள் போராளிகளின் தலமையிலான மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பால் நீர்ராகரம் கொடுத்து நேற்றைய தினம் முடித்து வைக்கப்பட்டுள்ளது. சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்முனைப்போடு ஈடுபட்ட முன்னாள் போராளிக்கு பல தரப்பிலிருந்தும் தமிழ் மக்கள் இடத்திலிருந்தும் ஆதரவு பெருகி வந்திருந்தது. உண்ணாவிரதம் இருந்த அழகரத்தினத்தின் உடல்நிலையை கருதி அவர் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட இருப்பதாகவும் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்து வைத்த தீபன் கருத்து தெரிவித்தார்.

இந்த விடயத்தில் கிளிநொச்சி எம்பி சிவஞானம் சிறிதரனின் சார்பு ஊடகவியலாளர் ஒருவர் மூக்கை நுழைத்து கேள்வி கேட்பதாக கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டு சர்சையை உருவாக்கினார்.

பெரும் காசு கொலிக்கும் மாவீரர் துயிலுமில்ல வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் எம்பி சிவஞானம் சிறிதரனிடமிருந்து மாவீரர் துயிலும் இல்லங்களை மீட்க மல்லுக்கட்டும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக அமைப்பினர் அழகரத்தினம் வர்ணகுலராசாவின் உயிரில் காட்டிய அக்கறையை கேலிக்குள்ளாக்கினார்.

அவருடைய கேள்விகளை இடைமறித்த மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக உறுப்பினர் ”நான் மூன்று நாளாக இங்கே நிற்கிறேன், நீர் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி, றோவினால் நடத்தப்படும் போராட்டம் என பதிவு போட்டு வருகிறீர்’’ என காட்டமாக பதிலளித்தார். சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக் கொண்டுவரப்ட்டுள்ளது. வர்ணகுலராசா முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பிலான போராட்டங்கள் மாற்றுவழியில் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி விகாரையை அனுமதித்த நல்லாட்சி அரசின் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தையிட்டி இடிப்பில் கைகோர்த்தார் !

தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் காணி உரிமையாளர்கள் நடத்தவுள்ள அமைதி வழிப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

தையிட்டிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை என்பது சட்ட ரீதியான அனுமதிகள் எவையும் பெற்றுக் கொள்ளப்படாமல், எமது மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது.

இதனால் பூர்வீக நிலங்களை இழந்துள்ள மக்கள் தங்களுடைய காணிகளை மீட்பதற்கு தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பை நிறைவற்றுவதற்கான முயற்சிகள் எம்மால் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

மக்களுடைய காணிகள் மக்களுக்கே சொந்தம் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம். திஸ்ஸ விகாரை அமைந்துள்ள பகுதி மாத்திரமன்றி கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே எமது திடமான நிலைப்பாடாக இருக்கின்றது. அந்த அடிப்படையில், காணி உரிமையாளர்களின் அமைதி வழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவளிக்கின்றோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தையிட்டி திஸ்ஸ விகாரை அமைப்பதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மைத்திரிபால சிறிசேன – ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் ஆகியோர் அங்கத்துவம் வகித்து ஆட்சிக்கு கொண்டு வந்த நல்லாட்சி அரசு காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. நல்லாட்சி அரசில் பிரதமராக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க தலைமையில் அறிவிக்கப்பட்ட ஆயிரம் விகாரை திட்டத்தை முன்னோக்கி நகர்த்தியவர் அப்போதைய புத்தசாசன அமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச ஆவார். இந்த ஆயிரம் விகாரை திட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட போது இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்தேசிய கூட்டமைப்பு நல்லாட்சி அரசுக்கான ஆதரவை வழங்கியதுடன் குறித்த நல்லாட்சியில் தையிட்டி விகாரையை இடிக்க வேண்டும் என குறிப்பிட்ட பா.உ சிறிதரனும் கைகோர்த்திருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தான் நல்லாட்சி அரசில் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி, இந்து சமய விவகார அமைச்சராக செயலாற்றிய டக்ளஸ் தேவானந்தா அடுத்து பதவியேற்ற கோட்டாபய ராஜபக்ச அரசிலும் அமைச்சராக பணியாற்றினார். எனினும் அண்மையில் ஏற்பட்ட என்.பி.பி அலையில் காணாமலாக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தா மீண்டும் தனது கட்சியின் அரசியலை நிலைநாட்ட திடீரென தூக்கத்தில் இருந்து எழுந்தவர் போல தையிட்டி விகாரையை இடிக்கும் பேரணியில் கைகோர்ப்பதாக அறிவித்துள்ளதாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்.

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு 

ஒரு தேர்தலில் கூட வாக்களிக்காதவரும் ஒரு தேர்தலில் 75 தடவைகள் வாக்களித்தவரும் எம்.பிகள் – யாழ் மக்களின் வினோத தெரிவு
இலங்கை அரசியலில் இருந்து விரைவில் விலகப் போவதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அனுராதபுரத்தில் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
“இந்த அரசியல் கலாசாரத்தின் மீது எனக்கு எந்த அனுதாபமும் இல்லை. நான் இதுவரை யாருக்கும் வாக்களித்ததில்லை. தற்போது மக்களுக்கான அரசியலில் ஈடுபட்டுள்ளேன். நீண்ட காலம் அரசியலில் நீடிக்கப்போவதில்லை. இருக்கும் வரை நேர்மையாக செயற்படவுள்ளேன்” என தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு அனுராதபுரத்தில் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அனுராதபுரம் காவல்துறையினரால் கைதான பா.உ அர்ச்சுனா, அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
ஒருபுறம் இதுவரை ஜனநாயக தேர்தலில் வாக்களிக்காத ஒரு நபரை யாழ்ப்பாண மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். மறுபுறம் புலிகளின் காலத்தில் தான் ஒரேநாளில் எழுபத்து ஐந்து தடவைகள் கள்ள வாக்குகள் அளித்த சிறீதரனை தெரிவுசெய்துள்ளார்கள் என குறைபடுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.