தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழ் தேசிய மக்கள் முன்னணி

அரசியல் தீர்வு: எடுத்த முடிவில் மாற்றம் இல்லை ! தமிழரசுக் கட்சி முரண்பாடுகளை அடக்கி வாசித்தது !

அரசியல் தீர்வு: எடுத்த முடிவில் மாற்றம் இல்லை ! தமிழரசுக் கட்சி முரண்பாடுகளை அடக்கி வாசித்தது !

நேற்று திருகோணமலையில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் தாங்கள் ஏற்கனவே முன்வைத்த தீர்வுத் திட்டங்களையே முன்னெடுப்பதெனவும், உள்ளுராட்சித் தேர்தலில் முன்னர் போட்டியிடத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதெனவும், ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய வழக்குகளை முடித்து வைப்பதெனவும் முடிவெடுக்கபட்டதாக கட்சியின் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் ஊடகவியலாளர்களுக்குத் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், இரா. சாணக்கியன், வைத்தியர் ஸ்ரீநாத், சிறிநேசன், குகதாசன், கோடீஸ்வரன், ரவிகரன், ஊடகப் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், உறுப்பினர்கள் சயந்தன், பீற்றர் இளஞ்செழியன், யோகேஸ்வரன், சேயோன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பா உ பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய சந்திப்புக்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே ‘முன்வைத்த தீர்வுத் திட்டங்களை முன்கொண்டு செல்வோம்’ என தமிழரசுக் கட்சிப் பேச்சாளர் எம் ஏ சுமந்திரன் இதனைத் தெரிவித்துள்ளார். அத்தோடு இதனை முன்னெடுத்துச் செல்ல ஏழு பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டார். இக்குழுவில் எம் ஏ சுமந்திரன், பா உ சிறிதரன் ஆகியோரும் உள்ளனர்.

கட்சிக்கு கட்டுப்படாது செயற்பட்டவர்கள் தொடர்பில் ஒழுங்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதும் மத்திய குழு கூட்ட முடிவில் இவைபற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. முரண்பாடுகளை அடக்கியே வாசித்தனர்.

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தம் ‘அப்பிட எப்பா’, மாகாணசபை ‘அப்பிட எப்பா’, இந்தியா ‘கமக்நா’ ரில்வின் அல்ல கஜா !

13வது திருத்தச் சட்டமும் வேண்டாம் மாகாண சபையும் வேண்டாம் இவை இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கூட இருக்க முடியாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அவர் ஊடகவியலாளருடைய கருத்துக்கு இட்ட பதில் கருத்தில், இந்தியா இவைபற்றிப் பேசாது ‘கம்மென்று’ இருப்பதையிட்டு தனக்குப் பெருமகிழ்ச்சியென்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பக்கம் இந்தியாவின் முகவர்களான பா.உ எஸ் சிறிதரனுடனும் பா உ செல்வம் அடைக்கலநாதனுடனும் கூட்டுச் சேர்ந்து அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறோம் என்று பேச்சுவாரத்தை நடந்தது. அதற்கு சுமந்திரன் ‘கட்சியின் அரசியல் யாப்பு சீர்திருத்த நடவடிக்கைகளுக்குப் புறம்பாக செயற்படுபவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்’ என்று இறுக்கிய ஆப்போடு பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மீண்டும் முருங்கைமரத்தில் ஏறிக்கொண்டார். பெரும்பான்மையான தமிழ் மக்கள் 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்ட பொன்னம்பலம் கஜேந்திரகுமார், தமிழ் மக்கள் கௌசல்யாவுக்கு கொடுத்த அங்கீகாரத்தைக் கூட தனக்கு அளிக்கவில்லை என்பதை உணரமறுக்கின்றார். 13வது திருத்தத்தையும் மாகாணசபையையும் ஏற்றுக்கொள்ளாத தமிழ் தேசிய மக்கள் முன்னணி 2025 முற்பகுதியில் நடைபெறும் உள்ளுராட்சித் தேர்தலில் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தமிழ் தேசியக் கட்சிகள், இந்திய அரசு ஜனாதிபதி அனுரவுக்கு அதீத முக்கியத்துவம் அளிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்துள்ளனர். 13வது திருத்தத்தைப் பற்றியே மோடி பேசவில்லை என்பதில் தமிழ் தேசியவாதக் கட்சிகள் சற்று மனமுடைந்துவிட்டன. பொன்னம்பலம் கஜேந்திரகுமாருக்கு முற்றிலும் முரணாக, 13வது திருத்தம் மாகாணசபை பற்றி கருத்து வெளியிட்ட வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜப் பெருமாள், தமிழகக் கட்சிகள் 13வது திருத்தத்தை அழுல்படுத்த பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரியிருக்கின்றார். பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அமெரிக்க முகவராகவும் வரதராஜப் பெருமாள் இந்திய முகவராகவும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

“தேசிய மக்கள் சக்தி இலங்கையின் அனைத்து மக்களதும் துணையோடு, மிகப்பெரும்பான்மைப் பலத்தோடு, ஆட்சி அமைத்துள்ளது எங்களுடைய ஆட்சியை கவிழக்கலாம் என கனவிலும் எண்ண வேண்டாம்” என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்து இருக்கின்றார். ஜனாதிபதி அனுர ஒருபடி மேலே சென்று, “மக்களுக்கான ஆட்சி அடுத்த பத்தாண்டுகளுக்குத் தொடரும்” எனத் தெரிவித்திருக்கின்றார். மேலும் “இந்தியாவில், ஜனாதிபதி அனுரவுக்கு எதிரான எவ்வித ஆர்ப்பாட்டங்களும் எழவில்லை. தவிர்க்க முடியாமல் ஜனாதிபதி அனுரா இலங்கையின் அனைத்து மக்களினதும் பிரதிநிதி என்பதை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை, தேசிய மக்கள் சக்தி உருவாக்கி உள்ளது. எங்களுடைய சக இனத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்று இந்தியா, இலங்கைக்கு கற்பிக்க வேண்டிய அவசியமில்லை” என்பதை தேசிய மக்கள் சகத்தி தெளிவாக உணர்த்தியுள்ளது என ஆய்வாளர் மயில்வாகனம் சூரியசேகரம் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கு வழங்கிய ஆணையை மீறி செயல்பட்டு வரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழரசு கட்சியால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் கிடைக்கப் போவதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

 

தமிழரசு கட்சியை மற்றும் சுமந்திரன் செயல்பாடு தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கே அவர் இவ்வாறு பதில் வழங்கினார்.

 

தேர்தல் காலங்களில் தமிழரசு கட்சி சமஸ்டி, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, ஒற்றை ஆட்சியை எதிர்க்கிறோம் என்ற கோரிக்கைகளை தமிழ் மக்கள் முன்வைத்து வாக்குகளை பெறுகிறார்கள்.

 

தேர்தலில் வென்ற பின்னர் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணைகளை மறந்து தமது இருப்புக்களையும் சுயலாப அரசியலையும் மேற்கொள்வதற்கான செயற்பாடுகளில் தமிழரசு கட்சியை ஈடுபட்டு வருகிறது.

 

அண்மையில் தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன், ஜனாதிபதி அனுரவை சந்தித்து மதுபான அனுமதி பத்திரங்களை பெற்றவர்களின் பெயர் பட்டியலை வெளியிடுமாறு கோருகிறார்.

 

இதில் வேடிக்கை என்னவென்றால் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுரவை முதன் முதலில் சந்திக்க சென்ற சுமந்திரன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அனுரவுடன் பேசாமல் மதுபான அனுமதிப்பத்திர பெயர்களை வெளியிடுமாறு கேட்கிறார்.

 

பெயர் பட்டியல் வெளியிடுவதை வேண்டாம் என நாங்கள் கூறவில்லை சுமந்திரன் தமிழரசு கட்சிக்குள் தனக்கு வேண்டாதவர்களை அப்புறப்படுத்துவதற்கும் தனது இருப்பை தக்க வைப்பதற்கும் மதுபான அனுமதி பத்திரங்களை வெளியிடுமாறு கேட்பதாக நான் கருதுகிறேன்.

 

ஏனெனில் தமிழ் மக்களுக்கு வரலாற்று துரோகங்களை செய்த ஜே.வி.பி தற்போது தேசிய மக்கள் சக்தி என்ற பெயருடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார்.

மஹிந்த ராஜபக்ச காலத்தில் தமிழ் மக்களின் இனப் படுகொலைக்கு அரசியல் நீதியாக ஆதரவு வழங்கிய கட்சிகளில் பிரதானமான கட்சியாக ஜே.வி.பி விளங்கியது.

சமாதான ஒப்பந்த காலத்தில் வடக்கு கிழக்கு இணைப்பை நீதிமன்றம் சென்று பிரித்தவர்களும் ஜே.வி.பியினர் தான்.

 

அதுமட்டுமல்லாது அரசியல் அமைப்புத் தான் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுதி யுத்தத்தில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இராணுவத்தை தண்டிக்க விடமாட்டேன் என கூறும் ஜனாதிபதியாக அனுர காணப்படுகிறார்

 

இவ்வாறு தமிழ் மக்களுக்கு துரோகங்களை இழைத்த கட்சியைச் சார்ந்தவரிடம் தமிழரசு கட்சி சுமந்திரன் சந்திக்க சென்ற போது தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்க வேண்டும் அதுவே வாக்களித்த மக்களுக்கு தமிழரசு கட்சி செய்ய வேண்டிய கடமை அதை சுமந்திரன் செய்யவில்லை.

 

அது மட்டும் அல்ல. தமிழரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதி அனுரவை சந்தித்தமை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் பொது வழியில் பேசப்படுவருகிறது.

 

ஆகவே தமிழரசு கட்சியும் சுமந்திரனும் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஆணையிலிருந்து விலகி தமது சொந்த சுயநல அரசியலுக்காக செயற்பாட்டுவரும் நிலையில் எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு எந்த விதத்திலும் பிரயோசனப்பட மாட்டார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம்!

கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது.

2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.

வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர்.

இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.

தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது திணிக்கப்படுகின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அமைப்பாளர் உள்ளிட்டவர்களை மட்டு சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தர்.

 

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மக்கள் மீது திணிக்கின்ற பொலிஸ் பயங்கரவாதத்திற்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை நாங்கள் மேற்கொள்வோம்.

 

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 25, 27 ம் திகதி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இருவர் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இதில் அரசாங்கமே நினைவு கூறலாம் என தெரிவித்துவிட்டு வடக்கு கிழக்கிலே மூதூர் சம்பூரை தவிர தவிர அனைத்து நீதிமன்றங்களிலும் தடை உத்தரவு பெறுவதற்கு பொலிசார் முயற்சி எடுத்து போது அனைத்து நீதிமன்றங்களிலும் நினைவு கூறுவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

அதேவேளை விடுதலைப்புலிகள் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற வகையில் அந்த அமைப்பின் சின்னங்கள் இல்லாமல் அந்த நினைவேந்தல் நடைபெறமுடியும் எனவும் கட்டளை வழங்கப்பட்டது.

 

இந்த நிலையில் அந்த நினைவேந்தலில் கலந்துகொண்டு அதனை ஒழுங்கு செய்த ஒரே ஒரு காரணத்திற்காக இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமிழ் மக்கள் நியாயமில்லாத பயங்கரவாத தடைச் சட்டத்தை தெரிந்து அதனுள் போகாது நடந்து கொண்ட போதும் அவர்கள் மீது குறிவைக்கப்படுகின்றது.

 

இதனை தமிழத் தேசிய மக்கள் முன்னணியாக கடுமையாக எதிர்க்கின்றோம்.

 

இந்த பயங்கரவாதத்தை மக்கள் மீது திணிக்கின்ற செயற்பாடுகளுக்கு அடிபணியாது நாங்கள் இதை எதிர்நோக்க வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். நாங்கள் இதனை எதிர்கொள்வோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

” புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை கிழக்கில் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்.” – திலீபன் நினைவு நடைபயணத்துக்கு எதிராக கவனயீர்ப்பு!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு பொத்துவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஆரம்பிக்கப்பட்ட தீலிபனின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தியை அக்கரைப்பற்றுப் பகுதியில் வைத்து மறித்த சிலர் எதிர்ப்பு ஆர்ப்பாடத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

 

நேற்று வெள்ளிக்கிழமை (15) மாலை குறித்த வாகன ஊர்தி இடம்பெற்றபோதே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

தியாகதீபம் திலீபனின் 36 ஆண்டு நினைவேந்தல் தினத்தையிட்டு 15ம் திகதி தொடக்கம் 27 ம் திகதிவரையில் திலீபன் வாரத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் பொத்துவில் இருந்து யாழ் நல்லூர் திலீபன் பூங்கா வரையிலான அவரின் உருவப்படம் தாங்கிய வாகன ஊர்தி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு பொத்துவில் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.

 

இந்த நினைவேந்தலில் வணபிதா சக்திவேல், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், சட்டத்தரணி காண்டீபன், மற்றும் கட்சி ஆதரவாளர்கள் கலந்துகொண்டு திலீபனின் உருவப்படத்தின் முன்னாள் ஈகை சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து மலர் தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி வாகன ஊர்தியை ஆரத்பித்து வைத்தனர்.

 

பொத்துவில் இருந்து திருக்கோவில் வரையுள்ள கோமாரி, ஊறணி, சங்கமம்கண்டி திருக்கோவில் வரையும் வீதிகளில் வாகன ஊர்திக்காக காத்திருந்த மக்கள் அதனை வீதிகளில் மறித்து திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

 

இதனை தொடர்ந்து அங்கிருந்து கல்முனையை நோக்கி அக்கரைப்பற்றின் ஊடாக மாலை 5 மணியளவில் பயணித்து வாகன ஊர்தியை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு அருகாமையில் திடீரென 7 பேர் கொண்ட ஒரு குழுவினர் வீதியால் சென்ற வாகன ஊர்தியை வழிமறித்து இலங்கையின் தேசியக் கொடியுடன் புலிகளின் மிருகத்தனமான சித்தாந்தங்களை எமது கிழக்கு மாகாண அமைதியான சமூகத்திற்கு பிரச்சாரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்.

 

கிழக்கு மாகாணத்தில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக புலிகளின் கொடூர கொலைகளை வன்மையாக கண்டிக்கின்றோம், அக்கரைப்பற்று முஸ்லீம்களுக்கு எதிராக புலிகள் நடாத்திய அட்டூழிங்களுக்கு எதிராக விசாரணை நடாத்துமாறு சர்வதேசத்தையும் யு.என்.எச்.சி.ஆர், வலியுறுத்துகின்றோம் என சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களுடன் சுமார் 5 நிமிடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அங்கு பதற்றம் ஏற்பட்டது.

 

இதனையடுத்து அங்கு வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில் வாகன ஊர்தி அங்கு ஒர் இரு நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் மாற்று வீதியால் வாகன ஊர்தியை பயணித்து கல்முனை பாண்டிருப்யை சென்றடைந்தது.

 

அங்கு வீதியில் ஊர்திக்காக காத்திருந்த மக்கள் ஊர்தியை மறித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தியதையடுத்து அம்பாறை மாவட்ட ஊர்தி பவனி நிறைவுக்கு வந்திருந்தது. இன்றையதினம் சனிக்கிழமை இரண்டம்நாள் கஞவாஞ்சிக்குடியில் வாகன ஊர்தி ஆரம்பித்து மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு சென்று அங்கிருந்து வாகரை ஊடாக திருகோணமலையை சென்றடையவுள்ளது.

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொல்லத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

“ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமது மக்களையே கூட கொள்ளத்தயங்க மாட்டார்கள் என்பதையே ஈஸ்டர் தாக்குதல் காட்டுகின்றது.” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் தற்போதைய அரசாங்கமே உள்ளது என வெளிக்கொணரப்பட்டுள்ள விடயங்கள் என்பது எங்களுக்கு ஒன்றும் புதிதல்ல.  இது ஒரு ஆச்சரியமான விடயமும் அல்ல. சனல் 4 காணொளியில் உள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு தாக்குதலின்போது இடம்பெற்ற உயிரிழப்புகள் மற்றும் சேதங்கள் காரணமாக நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள சிங்கள மக்களும் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

எவ்வாறாயினும் ஆட்சிப்பீடம் ஏறுவதற்கும், ஆட்சி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்வதற்கும், அதனை வெற்றி கொள்வதற்கும் இராணுவத்தை பயன்படுத்தி இவர்கள் எந்தவொரு உச்சக்கட்டத்துக்கும் செல்வார்கள்.  தமது மக்களையும் இழப்பதற்கு தயார் என்பதை சரியான கோணத்தில் அறிந்துகொள்ள முயற்சித்தால் இந்த தாக்குதலின் பின்னணி குறித்த உண்மைகள் அனைத்தையும் சிங்கள மக்கள் விளங்கிக்கொள்வார்கள் என நான் நினைக்கிறேன்.

மேலும் நாட்டின் உள்ளக விசாரணைகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணி மற்றும் தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை அறிந்து கொள்ள முடியுமா என்பது கேள்விக்குறியாகும்.  பாராளுமன்றத்தில் அனைத்து சந்தர்ப்பங்களிலும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே பெரும்பான்மை காணப்படுகிறது.

இந்த பெரும்பான்மை, அரசாங்க தரப்பினரையே இன்று சனல் 4 நிறுவனம் குற்றவாளிகளாக அடையாளப்படுத்தியுள்ளது.  தாக்குதலின் பின்னணியில் ராஜபக்ஷ தரப்பினரே உள்ளனர் என்பதை இந்த காணொளி மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே பாராளுமன்றத்தில் தெரிவுக் குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது வேடிக்கையானது.

அதாவது குற்றவாளி ஒருவர் தன்னுடைய குற்றத்தையே தானே விசாரிப்பது போன்றது. இது போன்ற முட்டாள்தனமான விடயத்துக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றார்.

“1980 களில் இருந்ததைப் போன்ற அடக்குமுறை மனப்பான்மையுடன் இனியும் நாட்டை ஆள முடியாது.” – அனுரகுமார திஸாநாயக்க

1980 களில் இருந்ததைப் போன்ற அடக்குமுறை மனப்பான்மையுடன் இனியும் நாட்டை ஆள முடியாது என்பதை சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உணர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறிய அவர், இதுபோன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது முழுமையான தோல்வியாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “1980 களுடன் ஒப்பிடும்போது உலகமும் சமூகமும் இப்போது முற்றிலும் மாறிவிட்டன.

 

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு சாதாரண மக்கள் பொறுப்பல்ல. பொருளாதார தோல்விக்கான பழியை ஆட்சியாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.பொருளாதார குற்றங்களுக்கு காரணமான ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் தங்களை ஒருங்கிணைத்து போராடவும், அவர்களை வெளியேற்றவும் உரிமை உள்ளது. மக்களின் போராட்டத்தை தடுக்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை.

எந்தவொரு போராட்டத்தையும் நசுக்குவதற்கு ரணில் விக்ரமசிங்கவை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஜனாதிபதியின் அடக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத நகர்வுகளை முறியடிக்க நாங்கள் மக்களுடன் நிற்போம்.

நியாயமற்ற மற்றும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஏற்பாடு செய்த போராட்டங்களை நசுக்குவதன் மூலம் எதிர்காலத்தில் மக்கள் எழுச்சியைத் தடுக்க அரசாங்கம் களம் அமைத்து வருகிறது.

 

பொருளாதாரம் புத்துயிர் பெறுவதைக் காட்டுவதற்கான அரசாங்கத்தின் தோல்வியுற்ற முயற்சியை மக்கள் இப்போது உணர்ந்துள்ளனர். அரசாங்கத்தின் அழிவுகரமான நகர்வுகளுக்கு எதிராக அவர்கள் போராடத் தொடங்கியுள்ளனர்.

சமீபத்திய மத்திய வங்கியின் அறிக்கை நாட்டின் உண்மையான பொருளாதார நிலைமையை வெளிப்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2023 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது.

அதே நேரத்தில் தொழில்கள் வீழ்ச்சியடைந்துள்ளன, இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர் என்பதை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது.கல்வி, சுகாதாரம் போன்ற அனைத்து துறைகளும் நெருக்கடியில் உள்ளன. இந்த நிலைமையை இனியும் பொறுத்துக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.

அரசாங்கத்திற்கு எதிராக பேசி நாட்டின் உண்மை நிலையை வெளிப்படுத்தும் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அரசாங்கம் வேட்டையாடத் தொடங்கியுள்ளது. ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர கைது செய்யப்பட்டு தாக்கப்பட்டதாகவும் அவரை துன்புறுத்திய காவல்துறை அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

 

 

 

கூட்டமைப்பினர் இந்தியாவிடம் கையேந்துகிறார்கள் என விமர்சித்த முன்னணியினர் அரசியல் தீர்வு கோரி இந்திய பிரதமருக்கு மகஜர் !

திம்பு கோட்பாட்டின் அடிப்படையில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

 

13 ஆவது திருத்தச் சட்டமானது தமிழ் மக்களை அடிமைகளாக வைத்திருப்பதை மாத்திரம் இலக்காகக் கொண்டு அமைந்துள்ளமையினால் அதனால் எந்தவொரு தீர்வும் கிடைக்காது என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடிதம் ஒன்றை பிரதமர் மோடிக்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணை தூதரகம் ஊடாக அனுப்பி வைத்த பின்னர் இதனை கூறியுள்ளார்.

 

ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி சிறிலங்கா அதிபருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தியப் பிரதமருக்கு தமிழ்க் கட்சிகள் பல இணைந்து ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறானதொரு சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனியாக பிரதமருக்கு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை அண்மையில் இந்தியா தமிழர்களின் எதிரி என்ற தோரணையிலும் – இந்தியா முன்மொழிந்த 13ஆம் திருத்தச் சட்டம் தேவையில்லை எனவும் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னணியினர் மேற்கொண்டு இருந்தனர். மேலும் இந்தியாவையே சார்ந்து இருக்கும் கூட்டமைப்பினர் பா.ஜ.க அரசின் எடுபிடிகளாக செயற்படுவதாகவும் கஜேந்திரர்களும் அவர்களின் முன்னணி ஆதரவாளர்களும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இருந்த நிலையில் இன்றையதினம் தீர்வு விடயமாக இந்தியாவுக்கே முன்னணி கட்சியினர் மகஜர் கொடுத்துள்ளமை தொடர்பில் பலரும் விசனம் வெளியிட்டு வருகிறார்கள்.

கடந்த வருடம் 2022 ஜனவரி மாதமளவில் இந்தியாவின் தமிழர்கள் தொடர்பில் முகம்பாராமல் இருக்கும் நடவடிக்கைகளை கண்டித்தும் – 13ஆவது திருத்தம் வேண்டாம் என்பதையும் வலியுறுத்தியும் பாரிய போராட்டங்களை மேற்கொண்ட போது இன்று மகஜர் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் அவர்கள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போது” கடந்த 70 வருட காலமாக தமிழர்களை அடிமைப்படுத்தும் அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றோம் என்ற அடிப்படையிலேயே, 13வது திருத்தத்தை அமல்படுத்துமாறு, தமிழ் கட்சிகள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக” தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவிக்கின்றார்.”இந்தியாவிடம் கூட்டமைப்பினால்  முன்வைக்கப்பட்ட கோரிக்கையானது, சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை கொண்ட ஒற்றையாட்சி அரசியலமைப்பை, தீர்வாக ஏற்றுக்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்துவதாக பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி.” -கனகரட்னம் சுகாஷ்

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை துப்பாக்கியால் சுடுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்னம் சுகாஷ் கூறியுள்ளார்.

இது தொடர்பில் சட்டத்தரணி சுகாஷ் தனது முகப்புத்தக பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வடமராட்சி கிழக்கில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நடக்கும் பாடசாலை பரீட்சை மண்டபத்திற்கு அருகில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் அரசியல் சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

 

குறித்த சந்திப்பு தொடர்பில், பரீட்சை மண்டபத்திற்கு அருகில் சட்டவிரோதமான முறையில் சிலர் ஒன்று கூடியுள்ளதாக காவல்துறை புலனாய்வு துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அவ்விடத்திற்கு புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் சென்று இருந்தனர்.

அவர்களது கூட்டம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் சென்றவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புலானய்வு உத்தியோகத்தர்களிடம் அடையாள அட்டையைக் கோரி இருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரின் கோரிக்கைக்கு அமைய, அவரிடம் தனது அடையாள அட்டையை காண்பிக்க முயன்ற வேளை, அங்கிருந்த நபர்கள் புலனாய்வு உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த வேளை அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

அதனை அடுத்து, அவருடன் கூடச் சென்ற மற்றைய புலனாய்வு உத்தியோகத்தரை மடக்கிப் பிடித்து சில மணி நேரம் வைத்திருந்த பின்னர் , மருதங்கேணி காவல் நிலையத்தில் உத்தியோகத்தரை கையளித்துள்ளனர்.

அதேவேளை, பரீட்சை மண்டபத்திற்கு அருகில் அரசியல் கூட்டம் நடத்தியமை மற்றும் காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தரை தாக்கியமை , அவர்களின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை உள்ளிட்டவை தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து , அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயார் ஆகி வருவதாக காவல்துறை தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.