டொனால்ட் டிரம்ப்

டொனால்ட் டிரம்ப்

கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !

கழிசறை நாடாக அம்மணமாகும் அமெரிக்கா: சர்வதேச நீதிமன்றத்தின் மீது பொருளாதார தடையை அறிவித்தது அமெரிக்கா !

2025 பிப்ரவரி 5 அன்று, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, இருவரும் காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றி, அங்குள்ள பாலஸ்தீனியர்களை வேறு நாடுகளில் குடியேற்றும் திட்டத்தை அறிவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு பிடியாணை பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை சர்வதேச நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.

முன்னதாக பாரிஸ் காலநிலை ஒப்பந்தம், உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் ஆகியவற்றிலிருந்து அமெரிக்கா அடுத்தடுத்து விலகியதுடன் பலஸ்தீன அகதிகளுக்கு உதவி வழங்கும் நிறுவனத்திலிருந்தும் விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !

டொனால் ட்ரமின் அதிரடி நடவடிக்கை: சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் !
சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறிய 18,000 வரையான இந்தியர்களில் 200 பேர் வரை நேற்று விமானத்தில் ஏற்றப்பட்டு செவ்வாய் இரவு இந்தியாவை வந்தடைந்தனர். சி -17 ரக இராணுவ விமானத்தில் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
கடந்த நவம்பர் ஜனாதிபதித் தேர்தலில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சியைக் கைப்பற்றிய டொனால் ட்ரம் ஜனவரி 20இல் பதவியேற்றதுமே தான் வழங்கிய வாக்குறுதிகளுக்காக செயலாக்கக் கட்டளைகளில் கையெழுத்திட்டார். அதன் படி அமெரிக்காவில் பிறந்து பிறப்புரிமையால் வழங்கப்படும் குடியுரிமையையும் நிறுத்தி அவர்களை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.
அமெரிக்காவில் 11 மில்லியன் பேர் வரை சட்டவிரோதமாக வாழ்வதாக மதிப்பிடப்படுகின்றது. இவர்களில் பெரும்பாலானவர்கள் தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். இவர்களை வெளியேற்றிவிட்டு அமெரிக்காவால் இயங்க முடியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் பொருளாதாரப் போரையும் ஒரே சமயத்தில் டொனால் ட்ரம் ஆரம்பித்துள்ளார். அதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் உயரவுள்ளது. ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்காவால் வரி மூலம் தண்டிக்கப்பட்ட நாடுகள் வர விதிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. கனடா அமெரிக்க பொருட்களுக்கு 25 வீத வரியை விதித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் பொருட்களின் விலைக அதிகரிக்கும். அத்தோடு குறைந்த சம்பளத்துடன் பணியாற்றிய குடியேற்றவாசிகள் திருப்பி அனுப்பப்டுகின்ற போது வேலைக்கான கேள்வி அதிகரிக்கும். உள்ளுரில் உள்ள தொழிலாளர்களுக்கு கூடுதல் சம்பளம் வழங்க வேண்டிவரும். அதனால் பொருட்கள் இன்னமும் விலையேறும்.
அமெரிக்க ஜனாதிபதியினதும் அவருடைய பணக்கார பசங்களதும் கூட்டு விளையாட்டு அமெரிக்காவின் பொருளாதாரம் மற்றும் அரசியலில் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அதே சமயம் இந்த தீவிர வலதுசாரிப் போக்கு ஏனைய மேற்குலக நாடுகளிலும் இதே போன்றதோரு வலதுசாரிப் போக்கைத் தூண்டுவதற்கே வழிவகுக்கும்.
சட்டவிரோதமாகக் குடியேறிய 200 வரையான இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டது, ஏனைய வலதுசாரி அரசியல்வாதிகளுக்கும் முனணுதாரணமாக அமைய உள்ளது. ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின் என ஐரோப்பிய நாடுகளில் வலதுசாரித்துவம் மேலோங்கி வருகின்றது. ஓல்ற்ர நேற்றிவ் போர் டொச்லன்ட் என்ற ஏஎப்டி கட்சி வெளிநாட்டவர்களை அவர்கள் ஜேர்மனியில் பிறந்தவர்களாக இருந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த மூவாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் சட்டவிரோதமாக வாழ்கின்றனர். இவர்களும் விரைவில் திருப்பி அனுப்பப்படுவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றது.

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !

அமெரிக்காவில் இருந்து 3000க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் திருப்பி அனுப்பப்படலாம் !|

டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான புதிய அமெரிக்க நிர்வாகத்தால் நாடு கடத்தப்படவுள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களில் 3இ065 இலங்கையர்களும் அடங்குவதாக அந்நாட்டின் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப்பிரிவு அறிவித்துள்ளது.

இந்த வகையில், உலகின் பல நாடுகளில் இருந்து வந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள 14 இலட்சத்துக்கு அதிகமானோரின் பெயர்ப் பட்டியலை புதிய அமெரிக்க நிர்வாகம் தயாரித்துள்ளது.

அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படுவதற்கான இறுதிப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள வெளிநாட்டினரின் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப்

டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள் – டிரம்ப் பிரிக்ஸ் நாடுகளுக்கு எச்சரிக்கை !

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க டொலருக்கு பதிலாக மற்றொரு நாணயத்தை உருவாக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் உறுப்பு நாடுகளை எச்சரித்துள்ளார்.

அமெரிக்க டொலருக்கு மாறாக செயல்படும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும். பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் புதிதாக எந்த நாணயத்தையும் உருவாக்கக் கூடாது. ஏற்கனவேஇ இருக்கும் வேறு நாட்டு நாணயத்தையும் பயன்படுத்த கூடாது என தெரிவித்துள்ள டிரம்ப், சர்வதேச வியாபாரங்களுக்கு பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்க டொலரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவர்களுக்கு வேறொரு ஏமாளி கிடைத்தால் அவர்களுடன் வியாபாரம் செய்யட்டும். டொலர் வேண்டாம் என்றால் அமெரிக்காவுடன் உள்ள உறவையும் துண்டித்துக் கொள்ளுங்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளைஇ இலங்கை BRICKS அமைப்பில் இணைவதற்கான ஆர்வத்தை வெளிப்படுத்திஇ 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் BRICKS மற்றும் புதிய அபிவிருத்தி வங்கியில் உறுப்புரிமைக்காக விண்ணப்பித்திருந்ததும் கவனிக்கத்தக்கது.

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம் இன்று பதவியேற்கிறார் !

அமெரிக்காவின் 47வது ஜனாதிபதியாக டொனால் ட்ரம் இன்று பதவியேற்கிறார் !

இன்று அமெரிக்காவின் 47வது ஜனாதிபதிய டொனால் ட்ரம் பதவியேற்கின்ளறார். வழமையாக பதவியேற்பு தலைநகர் வோஷிங்டனில் உள்ள கபிடல் பிளாஸாவுக்கு வெளியே இடம்பெறும். ஆனால் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள உறைய விறைக்க வைக்கும் குளிர் காரணமாக நிகழ்வுகள் கபிடல் பிளாஸாவுக்கு உள்ளேயே இடம்பெற ஏற்பாடாகி உள்ளது.

டொனால் ட்ரம் ஒரு எதிர்வு கூறப்பட முடியாத தன்னை முதன்மைப்படுத்தும் ஒரு இயல்பு கொண்டவராக இருப்பதால் சர்வதேச நாடுகளும் அவரை எப்படிக் கையாள்வது என்கின்ற சங்கடத்தில் உள்ளன. குறிப்பாக கனடா, பிரித்தானியா, மற்றும் ஐரோப்பிய நாடுகளே சங்கடத்தை எதிர்கொள்கின்றன. அதிகாரத் திமிரும் பணத் திமிரும் உடைய பெடியளைப் போல் ட்ரம், மற்றும் அவருடைய சகா எலோன் மஸ்க் போன்றவர்கள் விதிமுறைகளை மதிப்பதுமில்லை மற்றவர்களை மதிப்பதுமில்லை என்ற கணக்கில் செயற்படுகின்றனர்.

சீனாவுக்கு எதிராக இறக்குமதி வரிகளைக் கொண்டுவருவேன் என்ற சவாலோடு வருகின்றார் டொனால் ட்ரம். அவர் பதவியேற்க சில தினங்களுக்கு முன்பாக சீன நிறுவனமான பைற்டான்ஸின் ரிக்ரொக் சமூக வலைத்தளத்தை அமெரிக்க நீதிமன்றம் தடைசெய்து வைத்துள்ளது. ட்ரம் பதவியேற்றதும் முதல் கையொப்பமிடவுள்ள விடயம் ரிக்ரொக்கின் தடையை நீக்கச் செய்வதே எனத் தற்போது தெரியவந்தள்ளது. அமெரிக்காவின் மில்லியன் கணக்கான மக்கள் ரிக்ரொக்கைப் பயன்படுத்துகின்றார்கள். தன்னுடைய பதவியேற்பை அமெரிக்க மக்கள் சீனாவின் ரிக்ரொக் கூடாக பார்ப்பதற்கு வசதியாக ரிக்ரொக் மீதான தடையை நீக்கும் ஆவணத்தில் டொனால் ட்ரம் கையெழுத்திட உள்ளார்.

தான் வருகின்ற போதே சமாதானமும் சேர்ந்து வருகின்றது என இஸ்ரேல் – காஸா சமாதானஉடன்பாட்டை சுட்டிக்காட்டியுள்ள அவர், தொடர்ந்தும் நிரந்தரமான சமாதானத்தை நோக்கிப் பயணிக்க இஸ்ரோலுக்கு அழுத்தம் கொடுப்பாரா இல்லையேல் காஸாவை இஸ்ரேலின் பகுதியாக இணைக்க அனுமதியை வழங்குவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பெரும்பாலும் யுத்தத்திற்கு ஆர்வம் காட்டாதவராகவும் வியாபாரத்திற்கே ஆதரவானவராகவும் கருதப்படும் அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால் ட்ரம் காஸாவில் எடுக்கும் முடிவு மத்திய கிழக்கினதும் உலகினதும் அரசியல் போக்கில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும்.

உக்ரைன் போர் விடயத்தில் டொனால் ட்ரம் ஏற்கனவே தனது நிலைப்பாட்டை ஓரளவு தெளிவுபடுத்தி உள்ளார். அதன்படி ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்குமிடையே ரஷயா கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யாவிடமே விட்டுவிட்டு சமாதானத்தை முன்னெடுப்பதே ட்ரமின் திட்டமாக உள்ளது.

47வது ஜனாதிபதி டொனால் ட்ரமின் அமெரிக்க எப்படி அமையும் என்பதை இனிவரும் நாட்கள் எமக்கு தெரியப்படுத்தும்.

எலோன் மஸ்கின் இலங்கை முதலீடு ? அமெரிக்காவின் ஜனாதிபதி எலோன் மாஸ்கா? ‘இல்லவே இல்லை’ டொனால் ட்ரம்!

எலோன் மஸ்கின் இலங்கை முதலீடு ? அமெரிக்காவின் ஜனாதிபதி எலோன் மாஸ்கா? ‘இல்லவே இல்லை’ டொனால் ட்ரம்!

 

அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட டொனால் ட்ரம் பதவியேற்கு முன்னரே அவரது ஆலோசகரகா வரவுள்ள உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர் எலோன் மாஸ்க் சிக்கல்களை உருவாக்கி வருகின்றார். எலோன் மஸ்கின் கருத்துக்கள் நடவடிக்கைகள் அவர் அமெரிக்க ஜனாதிபதி என்ற பாங்கில் கருத்துக்களை முன்வைப்பதாக உள்ளது. அதனாலேயே அக்கேள்வி முன்வைக்கப்பட்டது. அதனை இல்லவே இல்லை என டொனால் ட்ரம் மறுத்திருந்தார்.

இதற்கிடையே எலோன் மாஸ்க் தனது Starlink செய்மதி இணைய சேவையை இலங்கையில் இயக்குவதற்கான உரிமைத்தைப் பெற்றிருந்தார். இதன்படி இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவும் இத்திட்டத்திற்கு அனுமதியை வழங்கியுள்ளது. இதற்கான சட்டத்தையும் பாராளுமன்றம் செய்துள்ளது. இருப்பின் இச்சேவைகளை வழங்குவதற்கான உபகரணங்களை இறக்குமதி செய்ய எலோன் மாஸ்க்கின் நிறுவனம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. ஆளும் என்பிபி அரசாங்கம் எலோன் மஸ்க் விடயத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என அரசியல் அவதானிகள் கூறுகின்றனர்.

தென்னாபிரிக்காவில் பிறந்த கனேடியரான எலோன் மாஸ்க் நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின்படி, அமெரிக்காவில் பிறக்காத எவரும் அமெரிக்க ஜனாதிபதியாக முடியாது என்றார் டொனால் ட்ரம். ஜனவரியில் பதவியேற்கவுள்ள டொனால்ட் ரம்ப்பிடம், எலோன் மாஸ்க் என்றாவதொரு நாள் அமெரிக்காவின் ஜனாதிபதியாவாரா? என்று கேட்ட போது அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.

உலகத்தின் இரண்டாவது தொழில்நுட்ப கோடீஸ்வரரான எலோன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துறையில் கொடிகட்டிப் பறக்கிறார். எலோன் மஸ்க்கின் நிறுவனங்கள் மற்றும் சேவைகள் போய்ச் சேராத நாடுகளே இல்லை எனலாம். மேம்படுத்திய செயற்கை நுண்ணறிவுத் தொழில் நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற இவரது முயற்சியால் பல புதுமையான கண்டுபிடிக்களை இவர் தலைமையிலான நிறுவனங்கள் செய்து வருகின்றன. ஆளில்லா ரக்சி, கண் பார்வையற்றவர்களுக்கான பார்வை வழங்கும் கருவி, தானியங்கி ரெஸ்லா கார்கள் எனப் பல கண்டுபிடிப்புக்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

நடந்து முடிந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்டு வென்ற டொனால்ட் ரம்ப்பின் வலதுகரமே எலோன் மஸ்க். ரம்பின் ஆலோசகராக செயற்படும் எலோன் மஸ்க் குடியரசுக்கட்சி மீது கொண்டுள்ள செல்வாக்கை பார்த்து மஸ்க்கை ‘ஜனாதிபதி மஸ்க்’ என அமெரிக்காவின் ஜனநாயக கட்சியினர் விமர்ச்சிக்கின்றனர்.

கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!

கனடா செல்லவுள்ளோருக்கு புதிய சிக்கல் – ட்ரம்பின் மிரட்டலுக்கு பணிந்தது கனடா!

சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் குற்றங்களை கண்காணிக்கும் பொருட்டு புதிய எல்லைப் பாதுகாப்பு விதிகளை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோருக்கு மேலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. கனடா, எல்லை பாதுகாப்பை வலுப்படுத்த 1.3 பில்லியன் கனேடிய டொலர்களை ஒதுக்கியுள்ளது. எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளில், ட்ரோன்கள், ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு கோபுரங்கள், மற்றும் நாய்கள், குழுக்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும், சர்வதேச சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கூட்டு குழு உருவாக்கப்படவுள்ளது.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மற்றும் சட்டவிரோத போதைப்பொருள் நடவடிக்கைகளைத் தடுக்காவிட்டால், கனடா மற்றும் மெக்சிகோ மீது 25 சதவீத வரிவிதிப்புகளை அதிகரிக்கப்போவதாக டிரம்ப் மிரட்டியதிலிருந்து கனடா கடும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றது. கனடா அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாகும் மற்றும் அதன் மொத்த ஏற்றுமதியில் சுமார் 75 சதவிகிதம் அமெரிக்காவையே சார்ந்துள்ளது. ட்ரம்ப்பால் விதிக்கப்படும் புதிய கட்டணங்கள் கனடாவின் பொருளாதாரத்திற்கு ஒரு அடியாக இருக்கலாம். இதனை சமாளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை கனடா முன்னெடுத்துள்ளது.

கடந்த ஒக்டோபர் வரையிலான 12 மாத காலப் பகுதிக்குள் 23,000 க்கும் மேற்பட்டவர்கள் அமெரிக்க-கனடா எல்லைக்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளனர். இது முந்தைய ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கனடாவின் புதிய விதிகள் காரணமாக கனடாவுக்கு புலம்பெயர விரும்புவோர் மற்றும் அகதி அந்தஸ்து கோருவோர் தொடர்பில் மேலும் கெடுபிடிகள் அதிகரிக்கப்படலாம். விண்ணப்பதாரர்களின் பின்புலம் மற்றும் ஆவணங்கள் கடுமையாக சரி பார்க்கப்படலாம், பொது நலனுக்காக ஆவணங்களை ரத்து செய்யும் உரிமை கொண்ட புதிய சட்டத்தால், குடியேற்றக் கொள்கைகள் இன்னும் கடுமையாக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் ட்ரம்ப் – புடின் வாழ்த்து !

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் ஒரு தைரியசாலி என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு டொனால்ட் ட்ரம்ப்பிற்கு வாழ்த்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ட்ரம்ப் ஒரு வணிகர் ஆவார். அவர் அரசியலில் போதியளவு அனுபவத்தை கொண்டவர் அல்ல என்பதால் சில தவறுகளை அவர் விடலாம்.

எனினும், அவர் மீது உயிரை பறிக்கும் ஒரு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் அவர் அதை எதிர்கொண்ட விதம் தன்னை மிகவும் கவர்ந்ததாக புடின் கூறியுள்ளார்.

மேலும், டொனால்ட் ட்ரம்ப் தனது உண்மையான குணாதிசயங்களை வெளிப்படுத்தக் கூடியவர் எனவும் புடின் விளக்கியுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் டொனால்ட் ட்ரம்ப்பை வாழ்த்துவதில் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகைக்காக டொனால்ட் டிரம்பிற்கு வாழ்த்துகள் – இஸ்ரேலிய பிரதமர்

வரலாற்றின் மிகச்சிறந்த மீள்வருகைக்காக டொனால்ட் டிரம்பிற்கு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் .

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் வெற்றிபெற்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில் உலக தலைவர்கள் சிலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

வரலாற்றின் மிகப்பெரும் மீள்வருகைக்காக வாழ்த்துக்கள் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின்நெட்டன்யாகு தெரிவித்துள்ளார் . வெள்ளை மாளிகைக்கான உங்களின் வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்தமீள்வருகை அமெரிக்காவிற்கு ஒரு புதிய ஆரம்பத்தையும் இஸ்ரேல் அமெரிக்கா இடையிலான மாபெரும் கூட்டணிக்கு ஒரு சக்திவாய்ந்த மறுஉறுதியையும் வழங்குகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களின் போது கமலா ஹாரிஸ்  ஜெயித்தால் இஸ்ரேல் இன்னும் 2 வருடங்களில் பூமியில் இருந்து காணாமல் போகும். ஆதலால் அமெரிக்க யூதர்கள் தனக்கு வாக்களிக்க வேண்டும்  என டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்காவின் 47ஆவது ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவாகி உள்ளார்.

இதனை அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சியான பொக்ஸ் சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் நேற்று நடைபெற்றன.

இந்நிலையில் அது தொடர்பான முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சியின் சார்பில் கமலா ஹாரிஸ் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப் போட்டியிட்டனர்.

 

அமெரிக்காவிலுள்ள மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் 538 தேர்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 270 பேரின் ஆதரவை பெறும் வேட்பாளர் வெற்றி பெறுவார்.

 

அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் இதுவரை 277 பேரின் ஆதரவை பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 பேரின் ஆதவை பெற்றுள்ளார். அதற்கமைய டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் செனட் தேர்தலில் 51 ஆசனங்களை வெற்றி பெற்றதன் மூலம் செனட் சபையை கைப்பற்றியுள்ளதாக குடியரசுக் கட்சி அறிவித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில், அதன் முடிவுகள் தற்போது வெளியாகி கொண்டிருக்கின்றன.