சிவஞானம் சிறீதரன்

சிவஞானம் சிறீதரன்

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !
வடக்கின் தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடுக்காமல் இந்தியாவிடம் கையளிக்க கோருகிறார் பா உ சிறிதரன். சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே என்பது போல் வடக்கை இந்தியாவிடம் கையளிக்கும் திட்டத்துக்கு பா உ சிறிதரன் முழு முயற்சி எடுத்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாக வடக்கின் உப்பளங்களை இந்தியாவிடம் கையளிக்குமாறு கோரியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரச்சாரங்களில் வடக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கு உறுதியளித்திருந்தது. அதன்படி வடக்கின் அபிவிருத்திக்கு கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன் அமைச்சர் குழு காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டை என்பனவற்றை பார்வையிட்டனர். ஆனையிறவு உப்பளத்தையும் வினைத்திறனுடன் இயங்கச் வைக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் சக்தியின் இலக்காக உள்ளது.
இதனை அறியாதவராக பா உ சிறிதரன் வடக்கின் பொருளாதாரத்தை வளப்படுத்த உங்களின் திட்டம் என்ன என நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர், வடக்கு – கிழக்கில் இருந்த பல தொழிற்சாலைகள் இயங்காமல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இப்போதும் மூடப்பட்டு அங்கிருந்த இரும்புகள் களவாடப்பட்டு சீமெந்து அத்திவாரங்கள் மட்டுமே உள்ளன. அவ்விடத்தில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்க வசதிகளைக்கூட உருவாக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
பா உ சிறிதரன், தேசிய மக்கள் சக்தி அமைச்சர்குழு தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு சில வாரங்களுக்குப் பின் நேற்றுக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தி தனியாரோடு, அரச – தனியார் கூட்டுத் தாபனமாகச் செயற்படுத்த எண்ணியுள்ளது. இதற்காக புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்தள்ளது. ஆனால் இவற்றைக் கணக்கெடுக்காமல் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இந்தியாவுக்கு அடகு வைக்கும் திட்டங்களை பா உ சிறிதரன் முன்வைத்துள்ளார்.
பா சிறிதரன் அண்மையில் இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைச் சிறையில் சென்று நலன் விசாரித்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் அயலவர் திருவிழாவுக்குத் தமிழகம் சென்று வந்த பா உ சிறிதரன் அங்கும் வடக்கு மீனவர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்திய மீனவர்கள் கடல்வளத்தை மட்டும் அழித்துவிடவில்லை. அவர்கள் கொண்டுவரும் போதைப் பொருட்கள் வடக்கின் இளைஞர் சமூகத்தையும் அழிக்கின்றது. ஆனால் பா உ சிறிதரனும் ஏனைய தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாகவே உள்ளனர்.

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்

கணவனின் அரசியல் தஞ்சத்திற்கு கடிதம் கேட்ட பெண்ணை படுக்கைக்கு அழைத்த எம்பி சிறிதரனின் வலதுகரம் வேழமாலிதன்
தமிழ்த்தேசிய அரசியலின் புதிய காவலனான எம்பி சிறிதரனின் அலுவலகம் மற்றும் கையாட்களின் காமக்களியாட்டங்களால் சமூக ஊடகங்கள் பரபரப்பாகியுள்ளன. சிறிதரனின் அரசியல் பிரவேசத்திற்கு பின்னணியில் இருந்து செயற்பட்ட வேழமாலிகிதனின் லீலைகளால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
வெளிநாட்டில் வாழும் கணவரின் அரசியல் தஞ்சத்திற்கு உதவியாக, கடிதம் கேட்டுச் சென்ற பெண்ணிடம் சில்மிஷத்தில் வேழமாலிகிதன் ஈடுபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து தனது பிரத்யேக கைத்தொலைபேசியிலிருந்து வட்ஸ்அப் ஊடாக படுக்கைக்கு அழைத்துள்ளார். வேழமாலிதனின் காம உரையாடல்கள் முகநூலில் வெளியாகியுள்ளன. இதனால் ஆத்திரம் அடைந்த வேழமாலிகிதன். அடியாட்களுடன் அப்பெண்ணின் வீட்டுக்கு சென்று அஸிட் ஊற்றப்போவதாக மிரட்டியுள்ளார். சிறிதரன் எம்பியும் இந்த விடயத்தை வெளியே சொல்லக்கூடாது என அப்பெண்ணை மிரட்டியுள்ளார்.
வேழமாலிதனின் கிளிநொச்சி பசுமைப் பூங்கா நிதி மோசடி, காணி அகரிப்பு, பாலியல் இலஞ்சம், கட்டப்பஞ்சாயத்து எனப் பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுகின்றன. ‘ஊழல் ஒழிப்பு வன்னி அணி’ என்ற முகநூல் கணக்கில் புகைப்பட ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பந்தப்பட்ட முகநூலை நடத்துவோரை தொடர்பு கொண்ட வேழமாலிதன். தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் செய்திகளை நீக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
வேழமாலிதனால் ஒரு பெண் தீக்குளித்து இறந்துள்ளார் என்றும் அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. தேசம் இவ் விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது மக்கள் வேழமாலிதன் பெண் பித்தர் என குறிப்பிடுகிறார்கள். ஊழல் ஒழிப்பு அணி வன்னி முகநூலில் வேழமாலிதனும் அவரது கையாளும் மது போதையில் கைது செய்யப்பட்டு விடுதலையானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை வேழமாலிதன் மறுக்கிறார். சிறிதரனின் அரசியலுக்கு வேழமாலிதனால் அஸ்தமனம் ஆரம்பமாகிவிட்டதாக சிறிதரன் ஆதரவாளர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
பா உ சிறிதரன் தன்னை தேசியத் தலைவரின் நிலையில் வைத்து தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். இவர் போர்த்தியுள்ள புலித்தோல் போர்த்த தேசியத்திற்குப் பின்னால் கள்ள மண் அகழ்வு, கள்ள மரம் கடத்துவது, கசிப்பு, வட்டிக்கு பணம் கொடுத்தல் போன்ற முடிச்சவிக்கிகள் மொள்ளமாரிகள் எல்லோரும் கூட்டிணைந்துள்ளனர். மாவீரர் துயிலும் இல்லங்களை அதனை பராமரிக்கும் அமைப்புகளிடம் கொடுக்காமல் தனது கட்டுப்பாட்டில் வைத்து நிதி மற்றும் அரசியல் வியாபாரம் செய்வது போன்ற பல குற்றச்சாட்டுக்கள் பா உ சிறிதரன் மீது வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிதரன் தனக்கு எதிரானவர்களுக்குத் துரோகிப்பட்டம் கட்டி தனது தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கின்றார். அண்மையில் உண்ணாவிரதம் இருந்த வனகுலராசாவை றோ ஏஜென்ட் என சிறிதரனின் ஊடகவியலாளர் பிரச்சாரம் செய்திருந்தமை தெரிந்ததே.
ஆனாலும் தற்போது முதற்தடவையாக சிறிதரனின் கிளிநொச்சி தமிழரசுக் கட்சிக் காரியாலயமும் ஒரு அந்தப்புரமாக மாறுகிறதா என்ற சந்தேகத்தை தற்போது அம்பலமாகியுள்ள செய்திகள் தெரிவிக்கின்றன
https://www.facebook.com/share/v/12G4evzFruv/

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !.

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !

 

தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியதில் இனி எந்த ஒரு மாற்றமும் இடம்பெறாது என்பதுடன் சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்தாவது, “எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !

“பெப் 04 : தனிநாடுக்கான கரிநாள் பேரணி; பெப் 05 யாழ் நூலகத்தை எரித்த கட்சிகளுடன் பேச்சுவார்த்தை” – கஜா – சிறிதரன் குழுவினரின் வித்தியாசமான கோரிக்கை !
பாராளுமன்ற விவகாரங்கள் உட்பட எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பிலான முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்றையதினம் நடைபெற்றது.
பாராளுமன்றத்திலும் வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்வது இக்கலந்துரையாடலின் முக்கிய நோக்கமாகும் என சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ள நிலையில் இந்த கூட்டத்தில் பா.உ க்களான சிவஞானம் சிறிதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் கலந்து கொண்டது சர்ச்சையாக மாறியுள்ளது.
பெப்ரவரி 04 ஆம் திகதியை கரிநாளாக கூறி தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட இன அடக்குமுறைக்கு தனித்தேசம் தான் தீர்வு என்ற தோரணையில் பேரணி நடாத்தியிருந்தனர் பா.உக்களான் சிறிதரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர். அடுத்த நாளே கறுப்பு ஜூலை கலவரங்கள், யாழ்ப்பாண நூலகத்தை எரித்தல் என தமிழர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாரம்பரிய வழி வந்த சஜித் பிரேமதாச உள்ளிட்ட குழுவினருடன் இணைந்து செயற்பட மந்திராலோசனை நடாத்துகின்றனர் என சமூக வலைத்தளங்களில் காரசாரமாக விவாதங்கள் இடம்பெறுகின்றன.
இதேவேளை எதிர்வரும் உத்தேச உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் என்.பி.பி அரசை எதிர்கொள்ள இணைந்து போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தைகளில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் மும்முரமாக ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

மாவீரர் தின நிகழ்வுகளுக்காக பாராளுமன்ற குழு கூட்டத்தின் திகதியை மாற்றிய அனுர அரசு – நன்றி கூறிய சிறீதரன் எம்.பி !

மாவீரர் நினைவேந்தல்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசு இதுவரை எந்த தடங்கல்களும் ஏற்படுத்தாதமை வரவேற்கத்தக்கதென, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் புதிய அமர்வு குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவித்ததாவது; பொதுவாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் மாவீரர் நினைவேந்தல்களுக்கு இடையூறு ஏற்படுத்தியே வந்துள்ளன.ஆனால், தேசிய மக்கள் சக்தி அரசு இடையூறு ஏற்படுத்தாதது மாத்திமன்றி 26ஆம் 27ஆம் திகதிகளில் நடத்தப்படவிருந்த பாராளுமன்ற அலுவல்கள் குழுக் கூட்டத்துக்கான திகதியையும் 25ஆம் திகதி மாற்றியமைத்திருக்கிறது.

26ஆம் 27ஆம் திகதிகளில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் இருப்பதை நான், சுட்டிக்காட்டியதை அடுத்தே அரசு, 25ஆம் திகதிக்கு அக்கூட்டத்தை மாற்றியமைத்தது.

தமிழர்களின் உணர்வுபூர்வமான நிகழ்வுகளில் அரசு கரிசனை கொள்வது திருப்தி தருகின்றது. அந்தக் கரிசனையுடனேயே இராணுவ முகாம்களாக மாறியுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு இராணுவத்தினரை வெளியேற்றினால், அது அரசின் முன்னேற்றகரமான, முன்னுதாரணமான நடவடிக்கையாக அமையும். குறிப்பாக முள்ளியவளை, கோப்பாய், கொடிகாமம், ஏறாவில் போன்ற இடங்களில் அமைந்துள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை விட்டு, இராணுவத்தினரை வெளியேற்றினால், அது நிச்சயம் மக்கள் மனங்களில் அரசு குறித்த சாதகமான நிலைப்பாட்டையே ஏற்படுத்தும். மக்கள் தங்கள் மனக் கவலைகளை ஆற்றுவதற்கான இடமல்லவா அது?

எனவே, இந்தக் காலகட்டங்களில் துயிலும் இல்லங்களில் இருந்து படையினரை அரசு விலக்கிக் கொள்ள வேண்டுமென, வேண்டுகோள் விடுக்கின்றோம். மாவீரர் நினைவேந்தலில் அரசின் செயற்பாடுகள் திருப்தி தருவதாகவே உள்ளன. அதுமாத்திரமல்ல சபாநாயகரின் தெரிவின் பின்னர் அவரை வாழ்த்துவதற்கு கட்சித் தலைவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவது வழமை. நேற்றைய 10 ஆவது பாராளுமன்றத்தின் கன்னி அமர்வில் சபாநாயகரை வாழ்த்துவதற்கு எனக்கு சந்தர்ப்பம் தரப்படவில்லை.

ஆனால், இதன் பின்னர் எனக்கு அனுமதி கொடுக்கப்படாமைக்கான காரணத்தைக் கூறி அமைச்சர் பிமல் ரணட்நாயக்க எனக்கு வருத்தம் தெரிவித்தார். அந்தவகையில் ஆளுங்கட்சியினரின் செயற்பாடுகள் முன்னனுதாரமாக உள்ளன.

மதுபானசாலைளுக்கு ஆதரவு வழங்கியதை நான் உறுதி செய்தால் அரசியலில் இருந்து விலகுவேன் – சிறீதரன்

மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன். போலிப் பிரச்சாரத்திற்கு எதிராக மக்கள் விழிப்படைய வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

 

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

 

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரசுக்கட்சியின் முதன்மை வேட்பாளராக களம் இறங்கியுள்ள நிலையில் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில் அது பலருக்கு குடைச்சலை ஏற்டுத்தியுள்ளது.

 

தமிரசுக்கட்சி தலைவராக ஜனநாயக ரீதியில் போட்டியில் வெற்றி பெற்றிருந்தேன். தலைவராக தெரிவு செய்த என்னை எமது கட்சிக்குள் வழக்குக்போட்டு செயற்படாது தடுத்தனர். மக்கள் இது தொடர்பாக செய்தி சொல்ல முற்படுகின்றனர்.

 

நாங்கள் செல்லும் இடங்களிலும் சொல்கின்றனர். எமது கட்சிக்குள் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சேறு பூசும் முயற்சியில் இங்குள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருடன் சேர்ந்து இன்னொருவரும் சேர்ந்து எனக்கு எதிராக சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இது தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய நிலையுள்ளது. மக்களுக்கு சொல்லி வருகின்றேன் நான் கிளிநொச்சியிலிருந்து யாருக்காவது பார் அனுமதிப்பத்திரத்திற்கு சிபார்சு செய்திருந்தால் அதனை உறுதிப்படுத்தினால் அரசியலிருந்து என்னை விலக்கி விடுங்கள்.

 

அதை எல்லாம் செய்ய முடியாதவர் ஏற்கனவே கிளிநொச்சியிலிருந்து பார் தொடர்பான விபரங்களை யாரோ ஒருவர் தேடி எடுத்திருக்கிறார். அதனை ஒருவர் என்னுடைய கடிதத்தலைப்பை பயன்படுத்தி போலியாக நான் அனுமதி கோரியதாக தெரிவித்து காட்டியிருக்கிறார்.

 

அதிலே சித்தார்த்தனுடைய பெயரும் குறிப்பிட்டிருக்கிறது. என்னுடைய கடித தலைப்பில் நான் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்து சித்தார்த்தனுடைய பெயர் எப்படி வரும் இதன் மூலம் மக்கள் விளங்கிக்கொள்வார்கள். பொலிஸ் நிலையத்தில் உரியவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

 

மக்களிடம் ஒன்றை சொல்கிறேன் மக்கள் என்னை நம்புங்கள் மதுபானத்திற்கான அனுமதி கொடுத்தமையை உறுதிப்படுத்தினால் நான் பாராளுமன்றம் தெரிவு செய்த பின்பும் அரசியலிருந்து விலகுவேன் என தெரிவித்தார்.