சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !

சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே ! வடக்கு தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடாமல் இந்தியாவிடம் கொடுக்க கோருகின்றார் !
வடக்கின் தொழிற்சாலைகளை தமிழர்களிடம் கொடுக்காமல் இந்தியாவிடம் கையளிக்க கோருகிறார் பா உ சிறிதரன். சிறிதரன் வருவார் முன்னே இந்தியா வரும் பின்னே என்பது போல் வடக்கை இந்தியாவிடம் கையளிக்கும் திட்டத்துக்கு பா உ சிறிதரன் முழு முயற்சி எடுத்து வருகின்றார். அதன் ஒரு கட்டமாக வடக்கின் உப்பளங்களை இந்தியாவிடம் கையளிக்குமாறு கோரியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தனது தேர்தல் பிரச்சாரங்களில் வடக்கில் உள்ள தொழிற்சாலைகளை மீள இயக்குவதற்கு உறுதியளித்திருந்தது. அதன்படி வடக்கின் அபிவிருத்திக்கு கணிசமான நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சில வாரங்களுக்கு முன் அமைச்சர் குழு காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை மற்றும் அச்சுவேலி கைத்தொழில்பேட்டை என்பனவற்றை பார்வையிட்டனர். ஆனையிறவு உப்பளத்தையும் வினைத்திறனுடன் இயங்கச் வைக்க வேண்டும் என்பது தேசிய மக்கள் சக்தியின் இலக்காக உள்ளது.
இதனை அறியாதவராக பா உ சிறிதரன் வடக்கின் பொருளாதாரத்தை வளப்படுத்த உங்களின் திட்டம் என்ன என நாடாளுமன்றத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர், வடக்கு – கிழக்கில் இருந்த பல தொழிற்சாலைகள் இயங்காமல் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளன. காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இப்போதும் மூடப்பட்டு அங்கிருந்த இரும்புகள் களவாடப்பட்டு சீமெந்து அத்திவாரங்கள் மட்டுமே உள்ளன. அவ்விடத்தில் சீமெந்து தொழிற்சாலையை உருவாக்க வசதிகளைக்கூட உருவாக்கவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளார்.
பா உ சிறிதரன், தேசிய மக்கள் சக்தி அமைச்சர்குழு தொழிற்சாலைகளைப் பார்வையிட்டு சில வாரங்களுக்குப் பின் நேற்றுக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் தேசிய மக்கள் சக்தி தனியாரோடு, அரச – தனியார் கூட்டுத் தாபனமாகச் செயற்படுத்த எண்ணியுள்ளது. இதற்காக புலம்பெயர் தமிழர்களுக்கும் அழைப்பு விடுத்தள்ளது. ஆனால் இவற்றைக் கணக்கெடுக்காமல் வடக்கு கிழக்கு பிரதேசங்களை இந்தியாவுக்கு அடகு வைக்கும் திட்டங்களை பா உ சிறிதரன் முன்வைத்துள்ளார்.
பா சிறிதரன் அண்மையில் இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைச் சிறையில் சென்று நலன் விசாரித்தது தொடர்பில் தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். சில மாதங்களுக்கு முன் அயலவர் திருவிழாவுக்குத் தமிழகம் சென்று வந்த பா உ சிறிதரன் அங்கும் வடக்கு மீனவர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்திய மீனவர்கள் கடல்வளத்தை மட்டும் அழித்துவிடவில்லை. அவர்கள் கொண்டுவரும் போதைப் பொருட்கள் வடக்கின் இளைஞர் சமூகத்தையும் அழிக்கின்றது. ஆனால் பா உ சிறிதரனும் ஏனைய தமிழ் தேசிய பாராளுமன்ற உறுப்பினர்களும் மௌனமாகவே உள்ளனர்.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *