யாழில் நீர் இழப்பால் இரு ஆசிரியர்கள் திடீர் மரணம் !
மார்ச் 16 ஆம் திகதி 53 வயதான கொக்குவில் இராமகிருஷ்ண வித்தியாலய ஆசிரியை பிரியதர்ஷினி கனகரத்தினம் பாடசாலையில் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார். இதேமாதிரி மார்ச் 09 ஆம் திகதி
வடமராட்சி வதிரியைச் சேர்ந்த 47 வயதான நெல்லியடி மத்திய கல்லூரியின் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் தணிகைவேள் என்பவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். இம் மரணங்களுக்கு அதிக வெப்பத்தால் நீரிழப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்ததாக யாழ்ப்போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் ஆசிரியர்கள் கற்பிக்கின்ற போதும் அதிக நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. ஐரோப்பிய நாடுகளில் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை தாண்டும் பொழுதே நீராகாரத்தை உட்கொள்ளுமாறு ஆலோசனைகளை வழங்க ஆரம்பித்துவிடுவார்கள்.
அப்படி இருக்கையில் இலங்கையின் குறிப்பாக வடக்கின் வெப்பநிலைக்கு குடிதண்ணீர் நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட வேண்டும் குறிப்பாக பாடசாலைகளில் குடிநீருக்கான வசதிகள் பரவலாக அமைக்கப்பட்டிருப்பது மிக அவசியம்.