சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !.

சிறிதரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார், சுமந்திரன் தான் பொதுச்செயலாளர், – தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் !

 

தமிழரசுக் கட்சியில் தற்போது பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவாகியதில் இனி எந்த ஒரு மாற்றமும் இடம்பெறாது என்பதுடன் சிறீதரனை கட்சியிலிருந்து வெளியேற்ற இடமளிக்கப்படாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் யாழ்.ஊடக மையத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் சீ.வி.கே சிவஞானம் மேலும் தெரிவித்தாவது, “எந்த ஒரு கட்சியும் மற்றைய தரப்பின் மீது காழ்ப்புணர்சியுடனோ அல்லது சேறுபூசல்களையோ முன்னெடுக்காது ஒரே குறிக்கோளுடன் வெற்றி இலக்கை அடையும் பொறிமுறையை உள்ளடக்கி அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து இதற்கான கள நிலையை உருவாக்க வேண்டும்.

அந்த வகையில் அவரவரும் தத்தமது சுயத்தோடு நின்று பேசி, ஒருமித்த கருத்தோடு வெற்றிவாய்ப்பு களச்சூழல் யாருக்கு பொருத்தமாக இருக்குமோ அதற்கேற்ப நகர்வுகளை முன்னெடுப்பதும் அவசியமாகும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *