கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு – இரண்டு சந்தேக நபர்கள் கைது !

கிளிநொச்சியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இரண்டு சந்தேக நபர்களுடன் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு பாவிக்கப்பட்ட இடியன் துப்பாக்கியும்,  மோட்டார் சைக்கிளும் கணேசபுரம் பகுதியில் வைத்து மீட்கப்பட்டுள்ளது.

விரைந்து செயல்பட்ட கிளிநொச்சி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் கிளிநொச்சி கணேசபுரம் பகுதி வயல் வெளியில் மறைத்து வைக்கப்பட்டவேளையில் குற்ற புலனாய்வு பிரிவினரினால் இன்று பகல் 1.00 மணியலவில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *