மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி இருவர் பலி – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, 29 மற்றும் 37 வயதான இருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *