அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகள் !

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை அரசாங்கம் கவனத்தில் எடுத்து மக்களுக்கு உரிய முறையில் நன்மைகளை வழங்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி இன்று (28) அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை பல தரப்பினரும் தாக்கல் செய்திருந்தனர்.

அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பாக இதுவரை 383,232 மேன்முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் பெறப்பட்டுள்ளன.

ஜூலை 10ம் திகதி வரை மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க அவகாசம் உள்ளது.

இதேவேளை இலங்கையின் மலையகம் – வடக்கு உள்ளிட்ட பல பகுதிகளிலும் குறித்த நலன் குறித்திட்டத்தில் உள்வாங்கப்படாத மக்கள் தெருக்களில் இருந்து போராட்டங்களை மேற்கொண்டு வருவதும் கவனிக்கத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *