“புலிகளுக்கு பணப்பரிமாற்றம் செய்து கொடுத்தவருக்கு டெலிகொம் நிறுவனத்தை விற்க இலங்கை அரசாங்கம் முயற்சி.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு பணப்பரிமாற்றம் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கே டெலிகொம் நிறுவனத்தை விற்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.

இன்று (22) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், தங்கத் திருடனை எப்படிப் பாதுகாத்து இந்தச் சபைக்கு அழைத்து வந்தார்கள் என்பதைப் பார்த்தோம் என்றால் இன்று சட்டத்தைப் பற்றி பேசி பயனில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் அவர் உரையாற்றுகையில், “இவற்றைச் செய்வதன் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியாது.

மக்கள் உணவு, பானங்கள் இன்றி தவித்து வருவதோடு, இக்கட்டான சூழ்நிலையை மக்கள் புரிந்து கொண்டு வாழுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்றார்.

பல்வேறு சட்டங்களை அரசாங்கம் கொண்டு வந்து மக்களை அடக்க முயற்சிக்கிறது. அதனைக் கொண்டு ஊடகங்களை பழிவாங்க முயற்சிக்கின்றனர்.

இந்த நாட்டில் நீதித்துறை மிகவும் ஊழல் நிறைந்தது என்பதோடு, ஊழல் தடுப்பு மசோதாவை கொண்டு வர முயற்சிக்கின்றனர். இவர்கள் ஒரு ஹிட்லரைப் போலவே வாழ முயற்சிக்கின்றனர்” என குற்றம்சாட்டியுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *