யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை காணவில்லையாம் – விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார்!

யாழ். பல்கலைக்கழக களஞ்சியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் பொருட்கள் களவாடப்பட்டமை தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையிலிருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டிடப் பொருட்கள் நீண்டகாலமாக களவாடப்பட்டுள்ளன. குறுகிய காலத்திற்குள்
சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மின் இணைப்பு வயர்கள், கட்டுக்கட்டாக காணாமல் போயுள்ளன.

இதனை அறிந்துகொண்ட நிர்வாகம் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *