இரு குழந்தைகளைப் பாலியல் துஸ்பிரயோகம் செய்த லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன்!

லண்டன் வெம்பிளியைச் சேர்ந்த சுப்பிரமணியம் சதானந்தன் (62) ஒரு வீட்டில் பெண் குழந்தையும் மற்றுமொரு வீட்டில் ஆண் குழந்தையையும் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை மார்ச் 21 லண்டன் ஜஸ்ல்வேர்த் கிரவுண் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டு உள்ளது. லண்டனில் பிரேமகுமார் ஆனந்தராஜாவின் பாலியல் குற்றச்செயல் நிரூபிக்கப்பட்டு நான்கு மாதங்களுக்குள் மற்றுமொரு பாலியல் குற்றவாளி சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளார். சுப்பிரமணியம் சதானத்திற்கான தண்டனைக்கான நீதிமன்ற அமர்வு யூன் 16 நடைபெற இருக்கின்றது.

பிரேமகுமார் ஆனந்தராஜா குற்றவாளியாகக் காணப்பட்ட பின்னும் கலாநிதி நித்தியானந்தன், ஆச்சுவே உயர்வாசற் குன்று முருகன் ஆலயம் உட்பட உட்பட சைவ ஆலயங்களில் முக்கிய உறுப்பினர்கள் சமூகத் தலைவர்கள் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் குற்றவாளிக்கு நற்சான்றிதழ் வழங்கி சமூகத்தில் தங்களை அம்பலப்படுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

பிரான்ஸ் லாகுர்னேயில் சிவாலயம் நடத்துகின்ற ஜெயந்திரன் வெற்றிவேலு யாழ்ப்பாணத்தில் இளம்பெண்களை திருமணம் செய்வதாக ஏமாற்றி அவர்களுக்கு போதையூட்டி சமூகச் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றார். போதைப்பொருள் தொடர்பில் அவர் மீதும் நல்லூரடியில் உள்ள அவருடைய லகஸ் ஹெட்டல் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளன. லாக்கூர்னே சிவன் கோவிலில் இருந்து பெறப்படும் பணத்திலேயே ஜெயந்திரன் என்ற குடுமிஜெயா சமூகச் சீரழிவு வேலைகளைச் செய்து வருகின்றார் என்றும் குற்றம்சாட்டப்படுகிறது. இவர் தற்போது சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் யாழ்ப்பாணத்தின் முக்கிய வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுப்பிரமணியம் சதானந்தனின் செயற்பாடுகள் பற்றி தேசம்நெற்க்கு தெரியவருவதாவது குடும்பங்களோடு நெருங்கிப் பழகிய சதானந்தன் அவர்களுடைய நம்பிக்கையைப் பெற்று அப்பிள்ளைகளை பாலிஸ் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

பெண் பிள்ளையை அவர் பன்னிரெண்டு வயதாக இருக்கின்ற போது தன்னுடைய வியாபாரம் சம்பந்தமாக சில ஆவணங்களைத் தயாரிக்க வேண்டும் என்று சொல்லி கணணியைப் பயன்படுத்த என்று சொல்லி அப்பிள்ளையின் படுக்கைஅறைக்கு சென்றுள்ளார். அங்கு ‘இது வேறொருவருக்கும் தெரியத் தேவையில்லை. இது எனக்கும் உங்களுக்கும் உள்ள ரகசியம்’ என்று சொல்லி அப்பிள்ளையை பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

அதேசமயம் மற்றைய வீட்டிலும் நம்பிக்கையின் அடிப்படையில் அவ்வீட்டிற்குச் சென்று அந்த ஆண் பிள்ளையையும் ஒன்பது வயது முதல் 13 வயதுவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்துள்ளார்.
ஏப்ரல் 27, 2019இல் சுப்பிரமணியம் சதானந்தத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சும்பிரமணியம் சதானந்தன் மே 10, 2019இல் கைது செய்யப்பட்டார்.

அதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பிரேமகுமார் ஆனந்தராஜா கைது செய்யப்பட்டிருந்தார். இரு குற்றவாளிகளுமே ஆரம்பத்தில் இருந்து தாங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்தே வந்தனர்.
சுப்பிரமணியம் சதானிற்கு எதிராக எட்டு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளும் இரண்டு சிறுவர்களோடு முறையற்று நடந்துகொண்ட குற்றச்சாட்டுகளுமாக பத்துக் குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.

இவ்வழக்குத் தொடர்பில் கருத்து வெளியிட்ட மெற் பொலிஸின் பொதுமக்கள் பாதுகாப்புப் பிரிவின் புலனாய்வு அதிகாரி நில் சிமித்சன் “நானும் எனது குழுவும் பாதிக்கப்பட்ட இருவரும் முன்வந்து தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை பொலிஸில் முறையிட்டதை வரவேற்கிறோம். அவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க, நாங்கள் அவர்களுக்கான உதவியையும் ஒத்துழைப்பையும் விசாரணை முழுவதும் வழங்கி இருந்தோம்.

பாலியல் துன்புறுத்தல்கள் அது பல ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால் என்ன இப்போது நடந்துகொண்டிருந்தால் என்ன, யார் வந்து எங்களிடம் முறையிட்டாலும் நாங்கள் அவர்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்போம் ஆரம்பத்திலிருந்தே நாங்கள் உங்களை நம்புவோம்” என்று தெரிவித்து இருந்தார்.

பெண் பிள்ளை வளர்ந்து பல்கலைக்கழகம் சென்ற பின்னரேயே ஸ்கைப் மூலமாக தனது பெற்றோருக்கு இச்சம்பவத்தை தெரியப்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஆண் பிள்ளையும் தனக்கு நிகழ்ந்ததை வெளிப்படுத்தி இருந்தார். இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட இந்தக் கொடிய அனுபவம் பிரேமகுமார் ஆனந்தராஜயாவினால் பாதிக்கப்பட்ட பெண் பிள்ளையின் அனுபவமும் ஓரே மாதிரியானதாகவே உள்ளது. குடும்பத்தாரோடு நெருங்கிப் பழகி, நம்பிக்கையை உருவாக்கி அதன் பின் பிள்ளைகள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்கள்.

பாலியல் குற்றவாளிகளான பிரேமகுமார் ஆனந்தராஜாவும் சுப்பிரமணியம் சதானந்தனும் ஒரு சில மைல் தூர வித்தியாசத்திலேயே வாழ்பவர்கள். இவர்கள் ஏற்கனவே ஒருவரை ஒருவர் தெரிந்தவர்களா என்பதை இச்செய்தி பிரசுரிக்கும் வரை உறுதிப்படுத்த முடியவில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *