நடராஜருக்கும், வள்ளுவருக்கும் சிலை வைத்துவிட்டு மக்களை பட்டினி போடும் யாழ்ப்பாணத்து தலைமைகள் !

தற்போதைய நிலையில் யாழ். மாவட்டத்தில் போதிய உணவு இல்லாதிருப்போர் பட்டியலில் 6500 இற்கு உட்பட்ட குடும்பங்கள் உள்ளன.

குறித்த குடும்பங்கள் மாத்திரமே உணவு பஞ்ச நிலைமையை எதிர்நோக்கும் நிலையில் உள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார்.

நேற்றைய தினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்டத்தில் உணவு அற்ற நிலைமை தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தக் குடும்பங்களுக்கு அரசு மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களின் விசேட வேலைத் திட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

இது ஒருபக்கமிருக்க நேற்றையதினம் 2000 வரையிலான கற்பிணி பெணகள் போசாக்கான உணவு இல்லாது அவதிப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்ததது. ஆனால் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டிய அரச அதிகாரிகள் சம்பள உயர்வு கோரி போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டிய அரசியல்தலைவர்களும் சமூக அமைப்புக்கள் பலவும் புலம்பெயர் தமிழர்களிடம் இருந்து பணத் பெற்றுகோயில் கட்டி – கௌரவிப்பு விழாக்களை நடாத்திக்கொண்டிருக்கிறார்கள். இவர்களை தான் தமிழ் ஊடகங்களும் இனமீட்பர்கள் என கொண்டாடிக்கொண்டிருக்கின்றன.

…………………………………………………………………………………………………………………………………………………………………..

காவிகளின் கூடாரமாகும் தமிழர் பகுதி – உலகப் பொது மறை தந்த வள்ளுவருக்கு காவியடித்த யாழ்ப்பாண மாநகரசபை !

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *