தமிழினப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் – யாழில் சுவரொட்டிகள் !

இலங்கையை இராணுவ ஆக்கிரமிப்புக்கு உள்ளாகிய தமிழனப் படுகொலையாளி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய் என்ற தொணியில் யாழில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டிலேயே இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினரை ஊழல்வாதிகளாக வெளிப்படுத்தும் சித்திரத்துடன் தென்னிலங்கை போராட்ட களங்கள் அமைந்திருந்த நிலையில், தமிழர் தேசத்தைப் பொறுத்தவரை அவர்கள் தமிழினப்படுகொலையாளிகள் என்பதனை இந்தச் சுவரொட்டிகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தெரிவித்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *