கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட சனத் ஜயசூரிய இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக நியமனம் !

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில், சுற்றுலாத்துறை அமைச்சு தொழில்துறையை மேம்படுத்த பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளது.

கல்விமான்கள் பலரின் பங்களிப்புடன் சுற்றுலா ஆலோசனை சபையொன்று உருவாக்கப்பட்டு, அந்த ஆலோசகர்களுக்கான நியமனங்கள் உத்தியோகபூர்வமாக அமைச்சர் தலைமையில் நேற்று இரவு கொழும்பில் இடம்பெற்றது.

கோட்டாபாய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு கோரி கோட்டா கோ கம போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் பல காரணங்களுக்காக தொடர்ந்து கைதாகி வரும் நிலையில்,  ராஜபக்ஷ அரசுக்கெதிரான போராட்டங்கள் முனைப்படைந்திருந்த போது முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜயசூரியவும் இந்த போராட்டங்களில் கலந்து கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *