பூநகரி கௌதாரிமுனை கடற்பகுதியில் சீனர்களின் அதிகரிக்கும் செயற்பாடுகள் – மீட்டுத்தாருங்கள் என மக்கள் கோரிக்கை !

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை கடலை, சீனர்களிடம் இருந்து மீட்டுத் தருமாறு, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

யாழ்ப்பாணத்தவர்களின் பெயரில் அனுமதி வழங்கப்பட்டுபுதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடலட்டை பண்ணை ஒன்றில் சீனர்கள் பலர் நிரந்தரமாக தங்கி நின்று பணியாற்றுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் இந்த கடலட்டை பண்ணை அமைக்கப்பட்டுள்ள போதிலும் பூநகரி பிரதேச செலாளரினதோ அல்லது கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தினதோ அனுமதி எதுவும் பெற்ப்படவில்லை.

இந்தக் கடலட்டை பண்ணை தொடர்பாக, பூநகரி பிரதேச செயலாளர் கிருஸ்னேந்திரனிடம் வினவிய போது, கடலட்டை பண்ணைக்கு, தம்மிடம் எந்த அனுமதியும் பெறப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.

எனினும் யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களத்திடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்த அனுமதி யாழ்ப்பாணத்தவர்கள் மூவரின் பெயரில் வழங்கப்பட்டுள்ள போதிலும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து சீன நாட்டவரே அதிகம் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *