தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத மாணவர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கியுள்ள விசேட சலுகை !

இரண்டாம் தவணை பாடசாலை விடுமுறை முடிந்து மீண்டும் எதிர்வரும் 9ஆம் திகதி பாடசாலைகளை மீள ஆரம்பிக்க திட்டமிட்டிருப்பினும் தற்போது பரவிவரும் கொரோனா தொற்று காரணமாக உரிய திகதியில் பாடசாலைகளை மீள திறக்க முடியாது போகும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

சிங்கள ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பாக சுகாதார அதிகாரிகளிடம் பரிந்துரைகளை கேட்டுள்ளதாகவும் சுகாதார பரிந்துரைகளின் அடிப்படையில் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தாமதடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“122 பிரதேசங்களுக்கு பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு மாணவர்களும் இத்தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். மாணவர்களின் செயற்பாடுகளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாதிருக்க மீண்டும் தொலைக்கல்வி நடவடிக்கைகளை ஒழுங்குபடுத்திய வகையில் அரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். வசதிகள் குறைந்த கிராமிய பிரதேச மாணவர்களுக்கும் இந்த வாய்ப்பை வழங்கும் வகையில் விசேட வேலைத் திட்டத்தை தயாரிப்பதாகவும்” அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் 9 ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட இருந்த போதிலும் கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகளின் இரண்டாம் தவணை விடுமுறையை ஒக்டோபர் 5ஆம் திகதி வழங்கப்பட்டது. உயர் தரப்பரீட்சை முடிவடைந்த்தும் மூன்றாம் தவணை நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 23 வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை இணையம் மூலமாக கற்பிக்க கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது. அதே நேரம் இணையவழியில் கற்பதற்கான தகவல் தொடர்பு சாதனங்கள் இல்லாத மாணவர்கள் சாதாரண தொலைபேசி ஊடாகக் கற்பதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . சாதாரண தொலைபேசியில் 1377 என்ற இலக்கத்தை அழுத்தி உரிய தொடர்பு மொழியை தெரிவு செய்து கொண்டு , திங்கள் தொடக்கம் வெள்ளி வரை காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மாணவர்கள் தமக்குத் தேவையான பாட விளக்கங்களையும் ஐயங்களையும் கேட்டறிய முடியும் எனவும் இதற்காக தொலை பேசிக் கட்ட ணம் எதுவும் அறவிடப்படமாட்டாது எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது . இக் கற்றல் செயற்பாடுகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளன . இதேவேளை இணையவழி கற்றல் நடவடிக்கைகள் 50 சதவீதமான மாணவர்களைச் சென்றடையவில்லை என்ற தகவல்கள் கண்டறியப்பட்டதன் அடிப்படையில் சாதாரண தொலைபேசியில் கற்கின்ற வசதி செய்யப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *