“கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதா? அது இப்போது சமூகத்தில் பரவுகிறதா? என்பதை அரசாங்கம் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விளக்க வேண்டும்” – அனுரகுமார திசாநாயக்க வேண்டுகோள் !

“கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதா? அது இப்போது சமூகத்தில் பரவுகிறதா? என்பதை அரசாங்கம் உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விளக்க வேண்டும்” என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

COVID-19 தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தை ஆரம்பித்துவைத்து நேற்று (23.10.2020) பாராளுமன்றில் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

குறித்த நிறுவனம் மீது முழுமையான விசாரணை நடத்தப்பட்டு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். குறித்த தொழிற்சாலை சுகாதார நடவடிக்கைகளை புறக்கணித்து அவர்களின் உடல்நிலையை பொருட்படுத்தாமல் வேலை செய்ய கட்டாயப்படுத்தியது என்றும் கூறினார்.

தொழிலாளர்கள் காய்ச்சல் மற்றும் வாந்தியெடுத்த போதும் அவர்களுக்கு வலி நிவாரணி மருந்துகள் மட்டுமே வழங்கப்பட்டு வேலை செய்ய வேண்டி கட்டாயப்படுத்தப்பட்டனர். இவ்வாறு தொழிற்சாலை அவர்களின் உற்பத்தி இலக்குகளை அடைவதில் மட்டுமே அக்கறை கொண்டிருந்தது என்றும் அனுரகுமார திசாநாயக்க குற்றம்சாட்டினார்.

மேலும் இரண்டு நாட்களுக்குள் 1,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளமை தொழிற்சாலையின் அலட்சியம் மிகவும் தெளிவாக காட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை முறையான தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறைக்கு உட்படுத்தாமல் சிலர் இந்தியாவில் இருந்துவந்து பிரண்டிக்ஸ் தொழிற்சாலைக்குள் சென்றனர் என வெளியாகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக அரசாங்கம் விசாரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அத்தோடு கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளதா? அல்லது இப்போது சமூகத்தில் பரவுகிறதா? என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்றும் அரசாங்கம் அதை உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் விளக்க வேண்டும் என்றும் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *