பிராந்தியத்தில் மிக பாராட்டத்தக்க கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுப்பதால் இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்று உறவுகளை பலப்படுத்தும் வகையில் 9.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க போவதாக ஜப்பான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அக்கிரா சுகியாமா அமைச்சர் டளஸ் அழகப்பெருமவை சந்தித்த போது இதனை தெரிவித்துள்ளார். மின் சக்தி அமைச்சில் இச்சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் மின்சார துறையின் முன்னேற்றத்துக்காக ஜப்பான் தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை வழங்க போவதாக தூதுவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வழங்கப்படும் ஆதரவு தொடர்பாக அமைச்சர் ஜப்பான் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.
முன்னதாக சீனா கொரோனாவால் வீழ்ச்சியடைந்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப பெருமளவான நிதியினை கடனாக வழங்கியிருந்தது. அது போல போல கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவஉபகரணங்களை ஐக்கியஅமெரிக்கா வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.