புதியபாராளுமன்றின் பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தவிசாளர், எதிர்க் கட்சித் தலைவர் பதவிகளுக்கானவர்கள் தெரிவு!

9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா வழிமொழிந்தார்.

இதனால் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார்.  முன்னதாக சபாநாயகராக யாப்பா அபேவர்த்தன தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

 

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *