தலைநகரின் தேர்தல் தொகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்தி அமோக வெற்றி !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது கொழும்பு தேர்தல் மாவட்டத்தினுடைய மத்திய கொழும்பு, கொழும்பு வடக்கு, மற்றும் தெஹிவளை போன்ற  தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள்  வெளியாகியுள்ளன.

மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 64692
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16688
ஐக்கிய தேசிய கட்சி – 2978
தேசிய மக்கள் சக்தி – 1230

கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 41059
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 16775
ஐக்கிய தேசிய கட்சி – 2676
தேசிய மக்கள் சக்தி – 1230 

தெஹிவளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 18,611
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -18,244
தேசிய மக்கள் சக்தி – 2,094
ஐக்கிய தேசிய கட்சி -1706

பொரளை தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஐக்கிய மக்கள் சக்தி – 20,450
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன -17,680
தேசிய மக்கள் சக்தி – 1,931
ஐக்கிய தேசிய கட்சி – 1,500

இதனடிப்படையில் கொழும்பு தேர்தல் மாவட்டத்தில் இலங்கையின் ஏனைய பகுதிகளை விட ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைத்துள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *