இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல தேர்தல் தொகுதிகளினுடைய முடிவுகள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது திருகோணமலை தேர்தல் மாவட்டத்தினுடைய மூதூர் தேர்தல் தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
ஐக்கிய மக்கள் சக்தி – 51,330
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 11,085
தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 9,502
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 1,073
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 875
இதனடிப்படையில் மூதூர் தேர்தல் தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.