திருகோணமலை – சேறுவிலவிலும் பொதுஜன பெரமுனவின் ஆதிக்கம் !

இலங்கையின் ஒன்பதாவது  நாடாளுமன்ற தேர்தலுக்கான  வாக்கு பதிவுகள் நேற்றைய தினம்  (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல்  அறிவிக்கப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே பல  தேர்தல் தொகுதிகளினுடைய  முடிவுகள் வெளியாகியிருந்த  நிலையில்  தற்போது திருகோணமலை – சேறுவில தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் ஏனைய பகுதிகளினை போலவே இந்த தொகுதியிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதிக்கமே காணப்படுகின்றது.

போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 34,035

ஐக்கிய மக்கள் சக்தி – 13,117

தமிழ் தேசியக் கூட்டமைப்பு – 4,723

தேசிய மக்கள் சக்தி – 992

ஐக்கிய தேசியக் கட்சி – 581

 

பதிவு செய்யப்பட்ட மொத்த வாக்குகள் – 73,782

அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் – 59,329

செல்லுபடியான வாக்குகள் – 55,606

நிராகரிக்கப்பட்ட வாக்குகள் – 3,723

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *