முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச் செயலர் பிரிவிற்குட்பட்ட விசுவமடு, கிழக்கு, விசுவமடு மேற்கு, மாணிக்கபுரம் ஆகிய கிராமசேவையாளர் பிரிவுகளில் இடம்பெயர்ந்த மக்கள் இன்று புதன்கிழமை மீள்குடியேற்றபடுகின்றனர். முகாம்களிலிருந்து வெளியேறி நண்பர்கள். உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்த மக்களே இவ்வாறு மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
விசுவமடு மகாவித்தியாலயத்தில் இயங்கும் புதுக்குடியிருப்பு உதவி அரசாங்க அதிபர் பணிமனையில் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு இம்மக்கள் அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியமர்த்தப்படுகின்றனர்.
இதேவேளை, முல்லத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேசச்செயலர் பிரிவிலுள்ள மற்றுமொரு கிராமமான தேராவிலில் எதிர்வரும் 12ஆம் திகதி பொதுமக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.