இந்திய அரசாங்கத்தின் நிதியுதிவியுடன் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத்திட்டம் வவனியாவில் அடுத்த வருடம் மாhச் மாதமளவிலேயே ஆரம்பமாகும் என வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி எச்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் சேதமுற்ற மற்றும், வீடுகள் இல்லாதவர்களுக்கு என சுமார் ஏழாயிரம் வீடுகள் இந்திய நிதியுதவியின் கீழ் அமைக்கப்படவுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்திற்கான பயனாளிகளைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் வவுனியா மாவட்டத்தில் நான்கு பிரதேசச் செயலர் பிரிவுகளிலும் தற்போது நடைபெற்று வருகின்றன எனவும் பதிவகள் நிறைவு பெற்றதும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வீடமைப்புப் பணிகள் ஆரம்பமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.