இந்திய அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான பயனாளிகளை பதிவு செய்யும் நடவடிக்கைகள் கிளிநொச்சிப் பகுதிகளில் மேற்கொள்ளபட்டு வருகின்றன. இவ்வீட்டுத்திட்டம் அடுத்துதவருடம் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதை யடுத்து இப்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஐந்து இலட்ச ரூபா பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளிநொச்சி உட்பட வன்னியில் வீடுகளை இழந்தவர்களுக்கு ‘நேர்ப்’ நிறுவனத்தினுடாக வீட்டுதிட்டங்கள் நடைமுறைப்படுத்துப்பட்டு வருகின்றன. 3 இலட்சத்து 25 ஆயிரம் ருபா பெறுமதியான வீடுகளே இத்திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்றன.
பல பொதுமக்களிடம் காணி உறுதிகள், அனுமதிப்பத்திரங்கள் இல்லாத காரணத்தினால் வீட்டுத்திட்டங்களுக்கு பதிவு செய்ய முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.