வட மாகாணத்தில் இதுவரை 1861 கிலோ மீற்றர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்துள்ளார். இக்கண்ணிவெடியகற்றும் பணியில் அரசசார்பற்ற நிறுவனங்கள் சிலவற்றுடன் 1000 இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு கண்ணிவெடிகள் காணப்படுவதாகவும் அவற்றை மீட்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டதும். வவுனியா செட்டிக்குளம் மெனிக்பாம் முகாமில் தங்க வைக்கப்பட்டு தற்போது எஞ்சியுள்ள 20 ஆயிரம் முல்லைத்தீவு மக்கள் மீள்குடியமர்த்தப்படுவர் எனவும் அவர் தெரிவித்தார்.