யாழ்.துரையப்பா விளையாட்டரங்கில் தீபாவளியை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை இராணுவத்தின் 51வது படைப்பிரிவினால் நடத்த ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்விற்கு யாழ்.மாநகரசபை இறுதி நேரத்தில் அனுமதி மறுத்து விட்டதாக படைத்தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்நிகழ்வு இன்று மாலை 6.30 மணிக்கு யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் நோக்கில் யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபறவுள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வையொட்டி 10 ஆயிரம் பெரிய மின்குமிழ்கள் மற்றும், 75 ஆயிரம் மின்குமிழ்களைக் கொண்டு யாழ். வேம்படிச் சந்தியிலிருந்து நிகழ்ச்சி இடம்பெறும் பகுதிவரை அலங்கரிக்கப்படவுள்ளதாகவும் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.