யாழ். குடாநாட்டில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பெற்று பயன்படுத்திய 55பேர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து யாழ்.நீதிமன்றம் நேற்று செவ்வாய் கிழமை 12 இலட்ச ரூபாவையும் அறவிட்டது. சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்திய குற்றத்திற்கு அபராதமாக 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவும், மின்சார சபைக்கு 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறும் யாழ்.மேலதிக நீதவான் அ.பிரேம்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
யாழ். மின்சார சபையினரும், பொலிஸாரும், கொழும்பிலிருந்து வந்த விசேட குழுவினரும் திடீர் சோதனைகளை நடத்தி சட்டவிரோத மின்பாவனையாளர்களை பிடித்தனர். இவ்வாறு பிடிபட்ட 55பேரும் நேற்று யாழ்.நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். இவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து நீதமன்றினால் மேற்குறிப்பிட்ட அபராதம் விதிக்கப்பட்டது.