மலையகத்தில் இம்முறை தீபாவளி கொண்டாட்டம் சோபையிழந்த நிலையில்.

விலைவாசி உயர்வினாலும், தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தீபாவளிக்கான முற்பணம் போதாதுள்ளதாலும் மலையகத்தில் இம்முறை தீபாவளி கொண்டாட்டம் சோபையிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையக வர்த்தக நிலையங்களிலும், தீபாவளி வியாபாரம் முன்னரைப்போல் அமையவில்லை எனவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தீபாவளிப் பண்டிகையை வடக்கு கிழக்கு தமிழர்களை விடவும் மலையத் தமிழர்களே விமரிசையாக கொண்டாடி வருவது குறிப்பிடத்தாக்கதாகும். ஆனால், இம்முறை மலையகத்தில் தீபாவளிப் பண்டிகை களைகட்டவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *