இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அரச படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னமும் 5100 பேர் மட்டும் புனர்வாழ்வு நிலையங்களில் உள்ளதாகவும், அவர்களையும் விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இப்புனர்வாழ்வு நிலையங்களில் 93 பெண் போராளிகளே மீதமுள்ளதாகவும் அவர்களில் 43 பேர் க.பொ.த. சாதாரண பரீடசைக்குத் தோற்றிய பின்னர் விடுவிக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார். மீதமுள்ள பெண்களும் கட்டம் கட்டமாக அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.