யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையம் நூல்கள் அன்பளிப்பு.

யாழ்.பொது நூலகத்திற்கு ஜேர்மன் கலாசார அமையத்தினால் 2000 யூரோ பெறுமதியான நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு நேற்று செவ்வாய்கிழமை யாழ்.பொது நூலகத்தில் யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜேர்மன் கலாசார அமையத்தின் பணிப்பாளர் பிஜோன் கொரில்ஸ், யாழ்.பொது நூலகர் எஸ்.தனபாலசிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜேர்மன் கலாசார அமையம் வருடந்தோறும் இலங்கையிலுள்ள நூலகங்களுக்கு 2000 யூரோ பெறுமதியான நூல்களை வழங்கி வருகின்றது. அவ்வகையில் இம்முறை யாழ்.நூலகம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் நன்றி தெரிவித்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ். பொது நூலகத்தை தமிழ்மக்களே பயன்படுத்துகின்றனர் ஆகவே தமிழ் மொழியிலான நூல்களை அதிகம் வழங்குவது பொருத்தமானது என தெரிவித்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *