முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னர் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் தற்போது, அவர்களின் சொந்தக் காணிகளில் மீள்குடியேறுகின்றனர். தண்ணீரூற்று, நீராவியடி, முல்லைத்தீவு ஆகிய பிரதேசங்களில் தங்களது சொந்தக் காணிகளில் குடிமனைகளை அமைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பலர் தங்கள் காணிகளில் குடியேறுவதற்காக வருகை தந்த வண்ணமுள்ளனர்.
போர் சூழ்நிலைகளின் போது அக்கிராமங்களிலிருந்து வெளியேறிய மக்களும், விடுதலைப் புலிகளினால் வடக்கிலிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட போது, வெளியேறிய மக்களுமே இவ்வாறு மீள்குடியேறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.