சீனாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ள சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் யாழ்ப்பாண மாவட்ட கைத்தொழில் துறையைச் சேர்ந்த 12 பேரும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இக் கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக இன்று புதன்கிழமை பயணமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
சீனாவின் ஹட்டன நகரில் எதிர்வரம் 15அம் திகதி தொடக்கம் 21அம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. இக்கண்காட்சியில் பெறப்படும் அறிவு, அனுபவத்தினூடாக யாழ். மண்ணில் புதிய தொழில் முயற்சிகளை உருவாக்குவதே தமது நோக்கம் என இங்கிருந்து இக்கண்காட்சியில் கலந்து கொள்ள செல்லும் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.