வடக்கின் முக்கிய தொழிற்சாலைகளை அரசாங்கம் தமது கட்டுப்பாட்டின் கிழ் கொண்டு வந்துள்ளது. இவ்வகையில் காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை, பரந்தன் இராசாயனக் கூட்டுத்தாபனம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை ஆகியன உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய கைத்தொழில் மற்றும், சிறுகைத்தொழில் அமைச்சின் செயலாளர் எஸ். சிவஞானசோதி இத்தகவலைத் தெரிவித்துள்ளார். நேற்று திங்கள்கிழமை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆனையிறவு, குறிஞ்சாதீவு உப்பளம், ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை என்பனவற்றை மீள இயங்கச் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவம். காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலையை புனரமைக்கும் நடவடிக்கையும் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.