முல்லைத்தீவு மாவட்டம் உடையார்கட்டு குளக்கட்டின் அருகில் அமைக்கப்பட்டிருந்த புலிகளின் நிலத்தடி பதுங்குகுழி ஒன்றிற்குள்ளிருந்து புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க்ப்பட்டுள்ளது. புலிகளின் வான்படைப் பிரிவிற்குச் சொந்தமான 75 கிலோ, 50 கிலோ நிறைகளையுடைய 11 விமானக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் குற்ற விசாரணைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நான்கு அடி நிளம், இரண்டரை அடி அகலம் கொண்ட நான்கு விமானக் குண்டுகளும், அதே அளவையுடைய 50 கிலோகிராம் எடையுள்ள ஏழு விமானக் குண்டுகளும் கண்டறியப்பட்டு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யுத்தம் நடைபெற்ற காலங்களில் விடுதலைப்புலிகள் தங்கள் இலகு ரக விமானத்தில் இத்தகைய குண்டுகளையே பயன்படுத்தியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். புலிகளின் விமானக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளமை இதுவே முதற்தடைவ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.