வடக்கில் தொடர்ச்சியாக பிடிபடும் கேரளா கஞ்சா பொதிகள் !
தலைமன்னார் கடற்பரப்பில் மிதந்து வந்த சுமார் 49 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சா பொதிகள் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் கடந்த மார்ச் மார்ச் மாதம் 28 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த கடல் பகுதியில் மிதந்து கொண்டிருந்த சந்தேகத்திற்கிடமான பொதிகளை அவதானித்து சோதனை செய்தபோது, அந்தப் பொதிகளில் பொதிச் செய்யப்பட்டிருந்த சுமார் 124 கிலோகிராம் மற்றும் 392 கிராம் கேரள கஞ்சாவை (ஈரமான எடையுடைய) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இவை 46 பொதிகளாக கட்டப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு 49 மில்லியன் ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.