உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

உடுவில் பிரதேச சபை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்காத எதிர்க்கட்சி யாழ்.பா.உக்கள் !

 

யாழ். உடுவில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஶ்ரீ பவானந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. பிரதேசம் சார்ந்த பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்ட குறித்த கூட்டத்தில் யாழ் மற்றும் கிளிநொச்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

வழக்கம் போலவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடமாகாண அவைத்தலைவருக்கான ஆசனங்கள் முன் வரிசையில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அக்கதிரைகள் கூட்டம் முடியும் வரை காலியாகவே இருந்தன.

இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஶ்ரீ பவானந்தராஜா, “அனைத்துப் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முறையான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, தான் கலந்து கொள்ள முடியாமை தொடர்பாக முற்கூட்டியே அறிவித்தலை வழங்கியிருந்தார். ஏனைய எவரும் முன்கூட்டியே அறிவித்திருக்கவும் இல்லை கலந்துகொள்ளவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *