மியன்மாரை உலுக்கிய பூகம்பத்தில் 1644 பேர் பலி!
மார்ச் 28 வெள்ளிக்கிழமை மியன்மார் நாட்டின் மையப்பகுதியில் ஏற்பட்ட பூகம்பத்தால் ஆயிரணக்கானோர் பலியாகியுள்ளனர். இச் செய்தி எழுதப்படும் வரை 1644 பேர் பலியாகியுள்ளதாக மியன்மார் இராணுவ ஆட்சியாளர்கள் உறுதிப்படுத்துள்ளனர். மேலும் பூகம்பம் காரணமாக 2,376 பேர் காயமடைந்துள்ளதுடன் 30 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மியன்மாரில் ஏற்பட்ட பூகம்பம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. மியன்மார் பூகம்பத்தின் தீவிரம் தாய்லாந்து பாங்கொக் நகரிலும் உணரப்பட்டதாக கூறப்படுகிறது. பாங்கொக்கில் 6 பலியாகியுள்ளதாகவும் , 26 பேர் காயமடைந்தும் மற்றும் 47 பேர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மியன்மாரில் நடந்தது போன்று என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் இடம்பெறலாம் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். எனவே அதற்கேற்ற வகையில் போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.