“தையிட்டி விகாரை விவகாரம் அகில இலங்கை ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினை, ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்கானது” எம்பி சிறீபவானந்தராஜா !

“தையிட்டி விகாரை விவகாரம் அகில இலங்கை ரீதியில் தீர்க்க வேண்டிய பிரச்சினை, ஒருங்கிணைப்பு கூட்டம் பிரதேச அபிவிருத்திக்கானது” எம்பி சிறீபவானந்தராஜா !

 

அண்மையில் தெல்லிப்பழை பிரதேச சபை அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலா நிதி ஸ்ரீ பவானந்தராஜா தலமையில் இடம்பெற்ற போது தையிட்டி விகாரை விவகாரம் பெரும் பேசுபொருளாக மாறியிருந்ததது.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட காணி உரிமையாளர்களில் ஒருவரான சுகுமாரி சாருஜன் தையிட்டி விகாரை கட்டப்பட்டுள்ள தங்களுடைய காணிகள் விடுவிப்பு தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.

காணி உரிமையாளரின் கேள்விக்கு பதிலளித்திருந்த எம்பி ஸ்ரீ பவானந்தராஜா இந்த விடயத்தை அகில இலங்கை ரீதியிலேயே தீர்க்க வேண்டும் என்று பின்வருமாறு பதிலழித்தார்.

எம்பி ஸ்ரீ பவானந்தராஜாவின் பதிலால் திருப்தியடையாத காணி உரிமையாளர்கள் எங்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை இல்லை. முடிந்தால் பௌத்த பிக்குமார் தரப்பிலிருந்து வழக்கைத் தொடருமாறு சவால் விட்டார்கள். இந்த தையிட்டி விகாரை விவகாரத்தில் நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையற்ற காணி உரிமையாளர்கள் வேறு எந்தப் பிணக்கிற்கும் கூட நீதிமன்றத்தை நாட மாட்டார்களோ என்று அவதானிகள் கேள்வி எழுப்புகின்றனர். நாட்டின் அதியுயர் துறையான நீதிமன்றத்தையே புறக்கணிப்பவர்கள் கட்சி அரசியலூடாக அரசாங்கத்தை அமைக்கும் அரசியல்வாதிகள் பிரச்சினைகளைப் தீர்ப்பார்கள் என்று கோரிக்கை விடுக்கின்றனர். முட்டாள்த்தனமான வாதம். சகல ஆவணங்களும் இருக்கும் போது காணி உரிமையாளர்கள் இந்தப் பிரச்சனையில் குளிர்காயும் சட்டத்தரணி அரசியல்வாதிகளின் உதவியுடன் நீதிமன்றத்தைத் தான் நாட வேண்டும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *