போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த 

போரை நடத்தியவன் நானே. போர்க் குற்றங்களில் யாரும் ஈடுபடவில்லை – முன்னாள் ஜனாதிபதி மகிந்த

 

விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கையின் முன்னாள் படைத்தளபதி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்தகரெனகொட மற்றும் முன்னாள் ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்யா ஆகியோருக்கு எதிரான எந்த குற்றச்சாட்டுகளும் எங்கும் நிரூபிக்கப்படவில்லை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மகிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையின் அப்போதைய நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்த நான்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போரை நடத்த முடிவு செய்தேன். தாக்குதலில் ஈடுபட்டிருந்த போது இராணுவம் அந்த முடிவை செயல்படுத்தியது. போரின் போது பெரிய அளவிலான மனித உரிமை மீறல்கள் நடந்ததாக பிரித்தானிய அரசாங்கத்தின் குற்றச்சாட்டுகளை நான் கடுமையாக நிராகரிக்கிறேன். எனவே, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தங்கள் கடமைகளைச் செய்த ஆயுதப் படை வீரர்களை குறிவைத்து வெளிநாட்டு அரசாங்கங்கள் மற்றும் அமைப்புகளால் நடத்தப்படும் அழுத்தங்களுக்கு எதிராக தற்போதைய அரசாங்கம் நிற்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

புலிகளை வென்றதை வைத்து மகிந்தவும் ஏனைய எதிர்க்கட்சிகளும் தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கடிகொடுக்க நேரம் பார்த்து இருந்தனர். அதற்கான வாய்ப்பை பிரித்தானிய அரசின் தடையுத்தரவு அவர்களுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது. அதே போல் மாறி மாறி இனவாதம் பேசி அரசியல் நடத்துவதற்கு தடையாக உள்ள தேசிய மக்கள் சிக்தியை கவிழ்ப்பதற்கும் தமிழ் தேசியக் கட்சிகளும் சிங்கள பேரினவாதக் கட்சிகளோடு கூட்டுச் சேர்ந்து இனவாதத்தை தூண்டிவிட்டு தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியை கவிழ்க்கலாம் என பல்வேறு முயற்சிகளையும் எடுக்கின்றனர். ஜனாதிபதித் தேர்தல், உள்ளுராட்சித் தேர்தலில் மண் கவ்விய சிங்கள தமிழ் தேசியவாதக் கட்சிகளுக்கு உள்ள ஒரே துருப்புச் சீட்டு உள்ளுராட்சி சபை. வாயில் வந்தது எல்லாம் பேசி களமாடுகின்றனர். மே ஆறு பலருக்கும் பல கட்சிகளுக்கும் இறுதி ஊர்வலமாக அமைந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *