இலவசக் கல்வியும் வேணும் ! போட்டிப் பரீட்சை இல்லாமல், அரச வேலையும் வேணும்! யாழ்.பல்கலை மாணவர்களின் காலத்துக்கு ஒவ்வாத கோரிக்கை !

இலவசக் கல்வியும் வேணும் ! போட்டிப் பரீட்சை இல்லாமல், அரச வேலையும் வேணும்! யாழ்.பல்கலை மாணவர்களின் காலத்துக்கு ஒவ்வாத கோரிக்கை !

யாழ் பல்கலைக்கழக இணைந்த சுகாதார விஞ்ஞான பீட மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணியொன்று நேற்று முன்னெடுக்கப்பட்டது.

இலவசக் கல்வியால் உருவான இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளை தவிர்த்து, கொத்தலாவல மற்றும் வெளிநாட்டு தனியார் பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்றவர்களை அரசுத்தொழிலில் இணைப்பதை அரசியல் தலைமைகள் கைவிட வேண்டும் என வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அத்தோடு, இலவசக் கல்வியை பாதுகாக்க வேண்டும் எனவும் இலவசக் கல்வியால் உருவாகும் அரசுப் பல்கலைக்கழகங்களில் உள்ள அனைத்து இணை மருத்துவ விஞ்ஞான பட்டதாரிகளும் அரசுத்தொழிலுக்கு உடனடியாக இணைக்கப்பட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இலவசக் கல்வியை வழங்கும் அரசாங்கமே தங்களுக்கு அரச வேலைகளைப் பெற்றுத்தருமாறு கோருகின்றனர். அரசதுறையில் தேவைக்கு அதிகமாக உள்ள 50 வீதமான அரச அலுவர்களைக் குறைப்பதற்கு அரசு தீவிர முயற்சி எடுத்து, நாட்டின் பொருளாதாரத்தை நிமிர்த்த வேண்டிய நிலையில் உள்ளது. இந்தப் பின்னணியில் இலவசக் கல்வியும் வேணும் போட்டிப்பரீட்சை இல்லாமல் அரச வேலையும் வேணும் என்று மாணவர்கள் போராடுவது பலரையும் புருவங்களை உயர்த்த வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தில் இருக்கும் போது தேசியக் கொடியை இறக்குகிறார்கள். பல்கலைக்கழகத்தால் வெளியே வந்தது அரசாங்க வேலை வேணும் என்கிறார்கள் என்கிறார் சமூக அரசியல் செயற்பாட்டாளர் சோலையூரான்.

இதனிடையே உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்களை கட்டுப்படுத்த பிரயத்தன முயற்சிகளை முன்னெடுத்தனர். இறுதியில் மேலதிக பொலிஸாரையும் வரவழைத்ததுடன் மாணவர்கள் கலைந்து சென்றதாக அறிய முடிகிறது.

யாழ் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதி ஊடகவியலாளருக்கு கருத்துதத் தெரிவிக்கையில், தனியார்தங்கள் சொந்தப் பணத்தைச் செலவு செய்து கற்பவர்களை மிகத் தரக்குறைவாக, அவர்கள் பணத்தைக் கொடுத்து பட்டம் பெற்றவர்கள் என்ற தோரணையில் அதாவது அவர்கள் கல்வி கற்காமல் லஞ்சம் கொடுத்து பட்டத்தைப் பெற்றது போன்று குறிப்பிட்டார். தற்போது அறிமுகப்படுத்துகின்ற ஐகியூ எக்ஸாம் ஐந்தாம் ஆண்டுக்குரியது என்றும் மட்டம்தட்டிய அவர், அந்தப் பரீட்சை இல்லாமல் தங்களை அரச வேலைக்கு எடுக்க வேண்டும் என்று கோருகின்றார். பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் ஐக்கியூ பரீட்சையை செய்வதில் என்ன தடை என்ற கேள்வி தவிர்க்க முடியாதது.

இங்குள்ள பிரச்சினை என்ன வென்றால் இவர்களுக்கு தாங்கள் பல்கலைக்கழகம் புகுந்துவிட்டோம் பட்டம் பெற்றுவிட்டோம் என்ற தலைக்கணம் இருக்கின்ற அளவுக்கு அவர்கள் தங்கள் அறிவுப்புலமையை இன்றைய சூழலுக்கு ஏற்ப வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால் தனியார் துறையிலும் பரீட்சை நேர்காணல் அடிப்படையில் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதால் இவர்கள் தொழில் சந்தையில் போட்டி போட முடியாதவர்களாக உள்ளனர். பல்கலைக்கழகம் செல்லாதவர்கள் தொழிற்சந்தைக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக்கு கொண்டு முன்னேறிச் செல்ல பல்கலைக்கழக பட்டங்களைப் பெற்றவர்கள் சிவனே என்று போராட்டத்தில் காலம் கடத்துகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல எந்த அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இலவசக் கல்வியும் தந்து போட்டிப் பரீட்சை இல்லாமல் அரச வேலைகளைத் தராது. அரச பணியாளர்கள் வினைத்திறனுடன் செயற்பட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. டிஜிற்றல் மயமாக்கல் மிக வேகமாகப் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. அரசும் ஒரு தொழில்நிறுவனமாக வினைத்திறனுடையவர்களையே வேலைக்குத் தெரிவு செய்யும். எதிர்காலத்தில் ஐக்கியூ ரெஸ்ற் மட்டுமல்ல, சைக்கோ அனலிஸிஸ், சிருவேசன் அனலிஸிஸ், ரீம் வேர்கக், கேஸ் ஸ்ரடி, இதைத்தாண்டி இரண்டு இன்ரவியூஸ் எல்லாம் முடித்துத்தான் வேலைக்கு ஆள்எடுப்பார்கள். அதலால் உங்கள் திறமைகளைத் தொடர்ந்து வளர்த்துக் கொண்டு தொழில் சந்தையில் உங்களை விற்கக்கூடியதாக தக்க வைத்துக்கொள்ளுங்கள். அல்லது சுயதொழில் செய்யத் தயாராகுங்கள். போராடி வேலை எடுப்பது வரலாறாகிவிட்டது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *